காட்டுக்குள்ள நடமாடி… நாட்டுக்குள்ள முடிசூடி! களைகட்டிய தைப்பூசம்! காவடிகளை காண கண்கோடி வேண்டும்!
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கோலாகலம் நடைபெற்று வருகிறது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையடிவாரத்தில் கிரிவல பாதையில் காவடி சுமந்து ஆடிப்பாடி கொண்டாடி, முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் இன்றைய தினம் தேரோட்டம் மாலை நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.
மலை அடிவாரத்தில் மயில் காவடி, இளநீர் காவடி, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ள நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க யானை பாதை வழியாக மலை மீது அனுப்பி வைக்கப்பட்டு, சாமி தரிசனம் அளிக்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே அனுப்பப்பட்டு வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் , மதுரை, விருதுநகர் எஸ்பிக்கள், ஐஜி தலைமையில் தென் மாவட்டங்களில் இருந்து 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.மாலையில் நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து பழனி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.45 மணிக்கு ரத வீதிகளில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. தற்போது தைப்பூச திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் திண்டுக்கல் - பழனி, தாராபுரம் பழனி, உடுமலை சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் யானை பாதை வழியாக மலை மேலே ஏறுவதற்கும் படிப்பாதை வழியாக கீழே இறங்குவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையங்களை பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
அதிக கூட்டம் காரணமாக திருப்பதி மலை போல சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் 4 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருக்கும் நிலையில் இன்றும், நாளையும் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பிலும், தன்னார்வலர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் சார்பில் அன்னதானமானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பழனி தேவஸ்தான நிர்வாகம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வரும் நிலையில் இதுவரை எந்தவிதமான சம்பாவிதங்களும் நடைபெறவில்லை என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications