காட்டுக்குள்ள நடமாடி… நாட்டுக்குள்ள முடிசூடி! களைகட்டிய தைப்பூசம்! காவடிகளை காண கண்கோடி வேண்டும்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கோலாகலம் நடைபெற்று வருகிறது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையடிவாரத்தில் கிரிவல பாதையில் காவடி சுமந்து ஆடிப்பாடி கொண்டாடி, முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது.

spirituality Dindigul Thaipusam

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் இன்றைய தினம் தேரோட்டம் மாலை நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.

மலை அடிவாரத்தில் மயில் காவடி, இளநீர் காவடி, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ள நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க யானை பாதை வழியாக மலை மீது அனுப்பி வைக்கப்பட்டு, சாமி தரிசனம் அளிக்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் , மதுரை, விருதுநகர் எஸ்பிக்கள், ஐஜி தலைமையில் தென் மாவட்டங்களில் இருந்து 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.மாலையில் நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து பழனி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.45 மணிக்கு ரத வீதிகளில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. தற்போது தைப்பூச திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் திண்டுக்கல் - பழனி, தாராபுரம் பழனி, உடுமலை சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் யானை பாதை வழியாக மலை மேலே ஏறுவதற்கும் படிப்பாதை வழியாக கீழே இறங்குவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையங்களை பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணித்து வருகின்றனர்.

அதிக கூட்டம் காரணமாக திருப்பதி மலை போல சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் 4 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருக்கும் நிலையில் இன்றும், நாளையும் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பிலும், தன்னார்வலர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் சார்பில் அன்னதானமானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பழனி தேவஸ்தான நிர்வாகம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வரும் நிலையில் இதுவரை எந்தவிதமான சம்பாவிதங்களும் நடைபெறவில்லை என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+