மாசி மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு.. தேவசம்போர்டு புது உத்தரவு
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் என்றும், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்ட்டர்கள் செயல்படும் என்றும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சபரிமலை சீசனான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவது வழக்கம்.

அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு 2 நாள் இடைவெளிக்கு பிறகு மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த மாதம் 20 ஆம் தேதியுடன் மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து நடை சாத்தப்பட்டது.
கடந்த சபரிமலை சீசனின் போது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் வழக்கமாக இருந்தபோதும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. அப்படி வசதிகள் கூட இல்லாமல் மக்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். இந்த முறை 50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை 5.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்படும். அன்று பூஜைகள் ஏதும் நடத்தப்படாது. மீண்டும் கோவில் நடை அடைக்கப்பட்டு, பிப்ரவரி 14 ம் தேதி காலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 5 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நாட்களில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிப்ரவரி 18 ஆம் தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
14ஆம் தேதி காலை 5 மணிக்கு நெய் அபிஷேகத்தில் தொடங்கி இரவு வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். பக்தர்கள் முன்பதிவு செய்ய வசதியாக நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்படவுள்ளது.
பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் என்றும், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்ட்டர்கள் செயல்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications