இன்று ஆடிப்பூரம் 2025! அம்பாளுக்கு எத்தனை வளையல்களை மாலையாக சாத்தலாம்? என்னென்ன நிறங்கள்?
சென்னை: ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு எத்தனை எண்ணிக்கை கொண்ட வளையல்களை மாலையாக அணிவிக்கலாம் என்பதை பார்க்கலாம். ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளையல் சாத்தினால் நல்லது. திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதமாகும். அந்த மாதத்தில் நிறைய விழாக்கள் நடைபெறும். ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு உள்ளிட்டவை ஆகும்.

இதில் ஆடிப்பூரம் என்பது சிறப்பு வாய்ந்தது. ஆடிப்பூரம் என்பது ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் அம்மன் வழிபாட்டு நாளாகும். இந்த நாளில், அம்பாளுக்கு வளையல் அணிவித்து வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அம்மன் கோவில்களில் இந்த நாளில் வளையல் காப்பு உற்சவம் நடைபெறும். அன்னைக்கு வளையல் மாலை அணிவித்து, பூஜைகள் செய்து வழிபடுவது அம்மனின் அருளைப் பெற உதவும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் இன்று ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு இன்று நிறைய வளையல்களை மாலையாக சேர்த்து வைத்து பின்னர் அதை பெண்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் மாலை அணிவிப்பதும் நல்லது, அந்த மாலையில் உள்ள வளையல்களை பிரசாதமாக வாங்கிக் கொள்வதும் சிறப்பு.
அம்மனுக்கு எத்தனை வளையல்கள் இருக்க வேண்டும் என்பதற்கு எந்தவிதமான வரையறையும் இல்லை. பொதுவாக, அம்மனின் திருவுருவச்சிலைக்கு ஏற்றார்போல், சிலர் 11, 21, 108 என அவரவர் விருப்பப்படி வளையல்களைக் கொண்டு மாலை கோர்த்து சாற்றுவார்கள். சிலர், ஒரு ஜோடி வளையல்கள் அல்லது அவரவர் கைக்கு அடங்கிய வளையல்களையும் சாற்றுவார்கள்.
அம்மனுக்கு வளையல் மாலை சாற்றுவது என்பது ஒரு பாரம்பரியமான வழிபாடு முறையாகும். சிலர் பல வண்ணங்களில் வளையல்களைத் தேர்வு செய்து, அவற்றை ஒன்றாகக் கோர்த்து மாலையாக அம்மனுக்கு அணிவிப்பார்கள்.
வளையல் மாலை மட்டுமின்றி, அம்பிகைக்குப் பிடித்தமான மலர்கள், பழங்கள், பொங்கல் போன்றவற்றை வைத்து வழிபடுவதும் நல்லது.
அம்பாள் வளைக்காப்பை ,
ஆடிப்பூரத்தன்று, அம்பிகைக்கு வளையல் மாலை அணிவித்து, மனதார வழிபடுவதன் மூலம் திருமணத்தடை நீங்கும், குழந்தைப் பேறு கிடைக்கும், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
அது போல் இந்த வளையல்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்ச் உள்ளிட்ட நிறங்களில் இருக்கலாம். கண்களுக்கு பளிச்சென இருக்கும் நிறங்களில் வளையல்களை வாங்கிக் கொள்ளலாம்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications