சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் நல்லெண்ணெய்,அரிசி வைத்து பூஜை..குறியீடு சொல்வதென்ன?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் அடுத்தடுத்து உத்தரவுப்பொருள் மாற்றப்படுவதால் ஏதாவது பெரிய அளவில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் புதிதாக இரண்டு பொருட்களை வைத்து பூஜை செய்கிறார்கள். அந்த பொருட்களை வைத்து பூஜை செய்வதால் உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமா? அல்லது விலை ஏற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிவன்மலை ஆண்டவர் பக்தரின் கனவில் வந்து ஏதாவது ஒரு பொருளை வைத்து பூஜை செய்ய சொல்வார். அந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து தனக்கு ஆண்டவரின் உத்தரவு கிடைத்துள்ளதாக சொல்வார். அவர் சொல்வது உண்மைதானா என்று பார்க்க சாமியின் முன்பாக பூ கட்டி போட்டு பார்ப்பார்கள். சாமி உத்தரவு கொடுத்தால் அந்த பொருளை கண்ணாடி பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருளை வைத்து சமூகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படும். உணவுப்பொருட்களை வைத்தோ, மளிகை பொருட்களை வைத்தோ பூஜை செய்தால் விலை ஏற்றம் ஏற்படும். மஞ்சள் வைத்தும், பருத்தி வைத்தும் சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைத்து பூஜை செய்த போது அதிக விலை ஏற்றம் ஏற்பட்டது. நூல் விலை அதிகமாக உயர்ந்தது. மஞ்சள் விலை உயர்ந்த போது விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த காலங்களில் 3 மாதம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் உத்தரவுப்பெட்டியில் வைக்கப்படும் பொருட்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இப்போது கடந்த சில மாதங்களாகவே உத்தரவுப்பெட்டியில் அடிக்கடி பொருட்கள் மாற்றப்படுகின்றன. பக்தர்களின் கனவில் வந்து உத்தரவிட்ட உடனேயே பெட்டியில் இருக்கும் பொருட்களை மாற்றிவிடுவார்கள்.

ஆண்டவன் உத்தரவு
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் எவ்வித பொருளுக்கும் கால நிர்ணயம் எதுவும் கிடையாது என, பக்தர்கள் மற்றும் கோவில் சார்பில் கூறுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இளநீர் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஜனவரி மாதத்தில் நெற்கதிர்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. விவசாயம் செழித்து பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் வேலை வைத்து பூஜை செய்யப்பட்டது எதிரிகள் பிரச்சினை ஒழியும் என்று சொல்லப்பட்டது.

மகளிர் தினத்தில் மாங்கல்ய சரடு
கடந்த 8ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டம் முத்தூர், வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான அகிலம் என்ற உலக உருண்டை, அத்திரி என்ற பசு சிலை, குதிரையை குறிக்கும் பொருள், 2 திருமாங்கல்ய சரடு ஆகியவை வைத்து பூஜிக்கப்பட்டது. உலக அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மகளிர் தினத்தில் மாங்கல்ய சரடு வைத்து பூஜை செய்யப்படுவதால் அதிக அளவில் திருமணங்கள் நிகழும் என்றும் முருகப்பெருமான் உணர்த்துவதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

நல்லெண்ணெய், அரிசி
இந்த நிலையில் இன்றைய தினம் ஈரோடு மாவட்டம் நம்பியூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்ற பக்தரின் கனவில் 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்ய சிவன்மலை ஆண்டவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து உலக உருண்டை, மாங்கல்சரடு, போன்றவை அகற்றப்பட்டு நல்லெண்ணெய்,அரிசி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் எள் விலை, நல்லெண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அரிசி உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பக்தர்கள் ஒரு சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஒரு சிலரோ இந்த பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

சுனாமி வந்தது எப்படி
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் துப்பாக்கித் தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா, பாகிஸ்தானை வென்றது என்றும், மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்ததாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறைக்கு போன சசிகலா
இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டபோது ஊழல் வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அரிசியும், நல்லெண்ணெய்யும் வைத்து பூஜை செய்யச் சொல்லி சிவன்மலை ஆண்டவர் எதை உணர்த்துகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications