பூஜை ரூமில் 1 பொருள் வைத்தால் போதும்.. வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்கும், கூரையை பிச்சிட்டு பணம் வருமாம்
சென்னை: வீட்டில் காசு, பணம் தங்குவதேயில்லையா? எவ்வளவு சம்பாதித்தாலும், பணம் கரைந்துவிடுகிறதா? தங்குதடையின்றி வீட்டிற்குள் பணப்புழக்கம் வரவேண்டுமானால், இதற்கான பரிகாரங்களை முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
வீட்டில் பணம் வைத்திருப்பதற்கென்றே ஒருமுறை உள்ளது.. எங்கே வேண்டுமானாலும் பணத்தை வைக்கக்கூடாது.. நீங்கள் பீரோ அல்லது பணப்பெட்டியில் பணம் வைப்பவராக இருந்தாலும் இதற்கான குறிப்பிட்ட திசையில் வைக்க வேண்டும்.

அந்தவகையில், பணப்பெட்டி அல்லது பீரோவை வடக்கு திசையில் வைக்க வேண்டும்.. ஒருவேளை வடக்கு திசையில் வைக்க முடியாவிட்டால், கிழக்கு திசையில் பணப்பெட்டி அல்லது பீரோவை வைக்கலாம். இருட்டான இடத்திலோ அல்லது காற்று புகாத இடத்திலோ பணத்தை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டினில் வறுமையையும், நிதி பற்றாக்குறையையும் மேலும் அதிகமாக்கிவிடும். அதேபோல, கழிப்பறை, பாத்ரூம்களில் பணத்தை வைக்கக்கூடாது.
உரிய திசைகள்: அதேபோல, தெற்கு திசையில் பணத்தை வைப்பதும் தவறு. தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு திசைகளில் பணத்தை வைக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் பணத்தை வைப்பதற்கு வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகள் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த திசைகள் நேர்மறை ஆற்றல் நிறைந்தவை அதோடு வீட்டில் செழிப்பையும் கொண்டு வருகின்றன.
அதேபோல, பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் போட்டு வைக்க வேண்டும். பணப்பெட்டியில் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லக்ஷ்மி அம்சம் பொருந்திய பொருட்களை வைக்கவேண்டும். இதனால், வாசனை பரவும் என்பதுடன், செல்வமும் நிலையாக தங்கும்.
பணப்பெட்டி: பிசினஸ் செய்பவராக இருந்தால், நீங்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கை, வட மேற்கு திசையை நோக்கியவாறும், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறும் பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை, கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக்கொள்ளலாம்.
அதேபோல, உங்கள் பூஜையறையில் 1 வெள்ளி நாணயம் எப்போதுமே வைத்திருப்பது, குடும்பத்தில் செழிப்பையும், பொருளாதார பலத்தையும் ஏற்படுத்தும். இதனால், லட்சுமி தேவியின் அருளும் வீட்டிற்குள் எப்போதும் இருக்கும். காரணம், வெள்ளிநாணயம் நேர்மறையான ஆற்றலை வெளியிடுகிறது... அத்துடன் பணத்தை ஈர்க்கும் தன்மைகொண்டது.. வீட்டின் பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை சரியான இடத்தில் வைத்திருந்தால், தெய்வங்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும்.
வெள்ளி நாணயம்: ஆனால், இதற்கும் திசைகள் உள்ளன.. அதன்படி, வெள்ளி நாணயத்தை பூஜை அறையின் வடகிழக்கு மூலையில்தான் வைக்க வேண்டும்.. இதுவே செல்வம் மற்றும் செழிப்புக்கான திசையாகும்.. புதிய வெள்ளி நாணயம் வாங்க விரும்புவோர், வெள்ளிக்கிழமைகளில் வாங்கி வீட்டிற்கு கொண்டு வரலாம். அப்படி பூஜையறையில் நாணயத்தை வைக்கும்போது, மேல்நோக்கியே வைக்க வேண்டும். கோயிலிலும் வெள்ளி நாணயத்தை வைக்கலாம். ஆனால், அதற்குமுன்பு நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications