Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமலை பிரம்மோற்சவம்.. மோகினியாய் உலா வந்த மலையப்பசுவாமி.. கருட வாகன சேவை காண குவிந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஐந்தாம் திருநாளான இன்று காலையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி அணிந்து மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். இரவு கருட வாகனத்தில் உலா வரும் மலையப்பசுவாமியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பிரம்மோற்சவம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் பல்வேறு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் ராஜகோபுரம் முற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Thirumala Tirupati Brahmotsavam 2023 Malayappaswamy on Garuda vahana sevai Today

தினசரியும் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சேஷவாகனம், அன்னவாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல், கற்பக விருட்சம், சர்வ பூபால வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார் மலையப்பசுவாமி. மாட வீதிகளில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

5ஆம்நாளன்று கருட வாகன சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடவாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் மலையப்பசுவாமி. பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் திருநாளில் ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, ஆண்டாள் அணிந்திருந்த வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை திருமலை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

Thirumala Tirupati Brahmotsavam 2023 Malayappaswamy on Garuda vahana sevai Today

ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளி, மாலை அணிந்து நான்கு மாட வீதிகளில் உலா வந்தால் மலையப்பசுவாமி. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு மோகினி அலங்காரத்தில் தோன்றி அசுரர்களை ஏமாற்றினார். அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின் 5வது நாள் காலை மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

Thirumala Tirupati Brahmotsavam 2023 Malayappaswamy on Garuda vahana sevai Today

இன்று இரவு கருடசேவை நடைபெறுகிறது. கருடசேவையில் எழுந்தருளும் மலையப்பசுவாமியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். எங்கும் கோவிந்தா முழக்கம் எதிரொலிக்கிறது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடு திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

Thirumala Tirupati Brahmotsavam 2023 Malayappaswamy on Garuda vahana sevai Today

மலையப்ப சுவாமி இன்றைய தினம் மகரகண்டி, லக்ஷ்மி ஆரம், சகஸ்ரநாம மாலை என மூலவரான ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர, வைடூரிய, மாணிக்க, மரகத, பவள, முத்து என நவரத்தினங்கள் மற்றும் நவமணிகளால் ஆன ஆபரணங்களை அணிந்து கொண்டு, கருடன் மேல் மகா விஷ்ணுவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Thirumala Tirupati Brahmotsavam 2023 Malayappaswamy on Garuda vahana sevai Today

சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. இன்றைய தினம் கருட வாகனத்தில் அருள்பாலிக்கும் மலையப்பசுவாமிக்கு புதிய திருக்குடைகள் நிழல் தர உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+