திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி! அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த "அந்த" மாலை!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலில் ரூ 1 நாணய மாலை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்டியலில் செப்டம்பர் மாதத்தில் ரூ 5.15 கோடியுடன் காணிக்கைகள் வந்த போதிலும் இந்த ரூ 1 நாணய மாலைதான் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். ஜாதகத்தில் ஏதேனும் பிரச்சினை, குடும்பத்தில் பிரச்சினை என எது இருந்தாலும் திருச்செந்தூர் முருகனை தரிசித்தால் அவை அங்குள்ள கடற்கரை காற்று போல் பறந்து போய்விடும் என்பது ஐதீகம்.

பிள்ளை வரம், திருமண தடை நீங்க, செல்வம் கொழிக்க, நோய் நீங்க என பல்வேறு காரணங்களுக்காக இவரை வந்து மக்கள் தரிசிக்கிறார்கள். அது போல் காணிக்கையும் ஏராளமாக வந்து குவிகிறது.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் வருமானம் எண்ணப்படுகிறது. அதன்படி உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் கோயில் வசந்த மண்டபத்தில் கோயில் தக்கார் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் எண்ணப்பட்டது.
உண்டியல்கள் எண்ணும் பணியில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பதினென் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினர், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்டியல் காணிக்கை எண்ணிய போது ரூ 5.15 கோடி ரொக்கம் கிடைத்தது.
அது போல் 2352 கிராம் தங்கம், 41,998 கிராம் வெள்ளி, 61,600 கிராம் பித்தளை, 5,129 கிராம் செம்பு, 13,739 கிராம் தகரம் மற்றும் வெளிநாட்டு பணம் 1,589 என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த காணிக்கையின் போது வழக்கத்தை விட உண்டியலில் 1 ரூபாய் நாணயங்களால் கோர்க்கப்பட்ட நாணய மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். அவர் யார் என்றும், என்ன வேண்டுதலுக்காக இது போல் செலுத்தியுள்ளார் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications