திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிரடி மாற்றங்கள்.. பக்தர்கள் தங்குவதற்கு இனி கவலைப்பட வேண்டாம்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல் காலத்தில் தங்குவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. நடமாடும் கன்டெய்னர் மொபைல் ரூம்கள் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரூம்களில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்பதிவு செய்து வருவார்கள். தங்கும் அறைகளையும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யாத பக்தர்கள் நேரடியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அறைகளை புக் செய்வார்கள்.

விடுமுறை நாட்கள், விழா நாட்கள் என்றால் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸின் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழியும். அதையும் தாண்டி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் கால்கடுக்க காத்திருப்பார்கள். மழையானாலும் சரி, வெயிலானாலும் சரி, அதை பற்றியெல்லாம் பொருட்படுத்தாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர்.
இரவு பகல் என இல்லாமல் எப்போதும் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். விடுமுறை நாட்களிலும் விழா நாட்களிலும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி ஏழுமலையானுக்கே ஓய்வு கிடைக்காது. விடுமுறை நாட்கள் மற்றும் பிரம்மோற்சவ நாட்களில் தங்குவதற்கு அறை கிடைக்காமல் பக்தர்கள் மண்டபங்களிலும் மரங்களுக்கு அடியிலும் சாலை ஓரமாகவும் பூங்காக்களிலும் பக்தர்கள் தங்கியிருப்பார்கள்.
திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் குறைவாக உள்ளது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிக ஓய்வு இல்லங்கள் கட்ட வனத்துறை அனுமதி இல்லை. பல இடங்களில் உள்ள பழைய ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இடம் கிடைக்காத பக்தர்கள் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் தங்கியிருப்பார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தற்காலிகமாக தங்குவதற்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காணிக்கையாளர் மூர்த்தி என்பவர் கன்டெய்னர் வடிவ மொபைல் ஓய்வறைகளை காணிக்கையாக வழங்கினார். அதில் ஒன்று திருமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அது சோதனை அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான டிரைவர்கள் இரவில் தங்குமிடமாக ஒதுக்கப்பட உள்ளது. மற்றொன்று ராம் பகீச்சா 3வது விடுதி அருகே அமைக்கப்பட்டுள்ளது அதில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்கலாம்.
கன்டெய்னர் வடிவில் நடமாடக்கூடிய தங்கும் ஓய்வறையில் ஒரே நேரத்தில் 12 பேர் தங்கும் வகையில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன. அவை இரண்டும் சேர்ந்து மொத்தம் ரூ.25 லட்சம் ஆகும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது திருப்பதியில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும் கன்டெய்னர் அறைகளை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நடமாடும் கண்டெய்னர் ரூம்களால் சுற்றுச் சூழலுக்கு பெரிதாக மாசு ஏற்படாது. இதனால் இதுபோல் மேலும் பல கன்டெய்னர் ரூம்களை உருவாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் விசேஷ காலங்களில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த அறைகளை அமைக்கும் போது பக்தர்களுக்கும் அது வசதியாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் எந்த ஆபத்தும் வராது. தேவஸ்தானத்தின் இந்த மொபைல் ரூம் திட்டத்திற்கு பக்தர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications