Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிரடி மாற்றங்கள்.. பக்தர்கள் தங்குவதற்கு இனி கவலைப்பட வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல் காலத்தில் தங்குவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. நடமாடும் கன்டெய்னர் மொபைல் ரூம்கள் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரூம்களில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்பதிவு செய்து வருவார்கள். தங்கும் அறைகளையும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யாத பக்தர்கள் நேரடியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அறைகளை புக் செய்வார்கள்.

Tirupathi balaji Temple introduce Mobile Container room special facilities for devotees

விடுமுறை நாட்கள், விழா நாட்கள் என்றால் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸின் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழியும். அதையும் தாண்டி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் கால்கடுக்க காத்திருப்பார்கள். மழையானாலும் சரி, வெயிலானாலும் சரி, அதை பற்றியெல்லாம் பொருட்படுத்தாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர்.

இரவு பகல் என இல்லாமல் எப்போதும் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். விடுமுறை நாட்களிலும் விழா நாட்களிலும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி ஏழுமலையானுக்கே ஓய்வு கிடைக்காது. விடுமுறை நாட்கள் மற்றும் பிரம்மோற்சவ நாட்களில் தங்குவதற்கு அறை கிடைக்காமல் பக்தர்கள் மண்டபங்களிலும் மரங்களுக்கு அடியிலும் சாலை ஓரமாகவும் பூங்காக்களிலும் பக்தர்கள் தங்கியிருப்பார்கள்.

திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் குறைவாக உள்ளது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிக ஓய்வு இல்லங்கள் கட்ட வனத்துறை அனுமதி இல்லை. பல இடங்களில் உள்ள பழைய ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இடம் கிடைக்காத பக்தர்கள் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் தங்கியிருப்பார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தற்காலிகமாக தங்குவதற்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காணிக்கையாளர் மூர்த்தி என்பவர் கன்டெய்னர் வடிவ மொபைல் ஓய்வறைகளை காணிக்கையாக வழங்கினார். அதில் ஒன்று திருமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அது சோதனை அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான டிரைவர்கள் இரவில் தங்குமிடமாக ஒதுக்கப்பட உள்ளது. மற்றொன்று ராம் பகீச்சா 3வது விடுதி அருகே அமைக்கப்பட்டுள்ளது அதில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்கலாம்.

கன்டெய்னர் வடிவில் நடமாடக்கூடிய தங்கும் ஓய்வறையில் ஒரே நேரத்தில் 12 பேர் தங்கும் வகையில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன. அவை இரண்டும் சேர்ந்து மொத்தம் ரூ.25 லட்சம் ஆகும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது திருப்பதியில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும் கன்டெய்னர் அறைகளை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நடமாடும் கண்டெய்னர் ரூம்களால் சுற்றுச் சூழலுக்கு பெரிதாக மாசு ஏற்படாது. இதனால் இதுபோல் மேலும் பல கன்டெய்னர் ரூம்களை உருவாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் விசேஷ காலங்களில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த அறைகளை அமைக்கும் போது பக்தர்களுக்கும் அது வசதியாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் எந்த ஆபத்தும் வராது. தேவஸ்தானத்தின் இந்த மொபைல் ரூம் திட்டத்திற்கு பக்தர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+