ஜனவரி 20ல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புதிய விதிமுறைகள்! தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்கும் நிகழ்வு நாளையுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி முதல் இலவச தரிசன பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி கடந்த 10-ஆம் தேதி நடந்தது. இதையொட்டி அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இந்த வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசித்தால் நம் பாவங்கள் நீங்கி புண்ணியம் ஏற்படும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் திருமலை திருப்பதியில் பக்தர்கள் சொர்க்க வாசலை தரிசிக்க கடந்த 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் கூறியிருந்தது. இந்த வைபவத்தை எளிய பக்தர்கள் தரிசிக்கும் வகையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த 9ஆம் தேதி முதலே சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்தது.
மேலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இந்த 10 நாட்களுக்கு மட்டும் ரூ 300 தரிசன டிக்கெட் கடந்த டிசம்பர் மாதமே விற்பனை செய்யப்பட்டது. 10 நாட்களுக்கும் சேர்த்து 1.40 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இது மட்டுமல்லாமல் நடைபாதை தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இலவச தரிசனத்தில் வருவோர் டோக்கன் பெற்றால்தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த 9 நாட்களாக ரூ 300 தரிசனம், இலவச தரிசன டோக்கன்களை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
தினமும் கோயில் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அது போல் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாளையுடன் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் முடிவடைகிறது.
இதனால் அடுத்த நாள் 20ஆம் தேதி முதல் டோக்கனின்றி இலவச தரிசனத்திற்கு வரிசையில் செல்வோர் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக புதிய அறிவிப்பையும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதாவது ஜனவரி 20ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்கு எஸ்எஸ்டி டோக்கன்கள் விநியோகம் செய்யப்படாது. அன்று சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன வரிசையில் மட்டுமே சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
ஜனவரி 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு வரிசையில் மட்டுமே வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. அது போல் ஜனவரி 19ஆம் தேதி, 20 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையாணை தரிசனம் செய்ய ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் இந்த இரு நாட்களும் ஆஃப்லைனில் வழங்கப்படமாட்டாது.
ஜனவரி 20ஆம் தேதி திருப்பதியில் புரோட்டோகால் தவிர மற்ற விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஐபி பிரேக் தரிசனத்திற்கு சிபாரிசு கடிதங்களுடன் வருபவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications