Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யோகம் தரக்கூடிய வாஸ்து டிப்ஸ்கள்.. ஈசான்ய மூலை காலியா இருக்கா? வீடு, மனை வாங்கும்போது இதை கவனியுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டுமானால், வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால், வீடு, மனை வாங்கும்போது, சில முக்கிய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்.

வீடு, மனை வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.. எப்பேர்பட்டாவது முதலில் மனையை வாங்கிவிட்டால், அதற்கு பிறகு, படிப்படியாக வீட்டை கட்டி விடலாம் என்பதும் கனமான நம்பிக்கையாக இருந்து வருகிறது.

spirituality land

பாடுபட்டு பணம் சேர்த்து வீட்டு மனையை வாங்கும்போது, அதை தேர்வு செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.. நல்ல மனை அமைவதுதான், வளமான வாழ்க்கைக்கு அடிப்படையாகும்..

அந்தவகையில், கிழக்கு மனைகள், வடக்கு மனைகள், தெற்கு மனைகள், நைருதிய மனைகள், மேற்கு மனைகள், வாயுவிய மனைகள் என எட்டு வகையான மனைகள் இருக்கின்றன. இவைகளில் எந்த மனைகளை தேர்ந்தெடுத்தாலும், மனையின் பொதுத் தன்மை, சிறப்புத் தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மனையின் மேடு பள்ளங்களையும் நன்கு அறிய வேண்டும்.

வடக்கு பள்ளம்: குறிப்பாக, மனையானது தெற்கே உயர்ந்து வடக்கே பள்ளமாக இருக்கவேண்டும். அதேபோல, மேற்கு உயர்ந்து, கிழக்கு பள்ளமாக இருக்க வேண்டும்.,. அதாவது, நைருதியம் உயர்ந்து ஈசான்யம் பள்ளமாக இருப்பது கூடுதல் சிறப்பு கொண்ட மனைகளாகும்.. தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

மற்றபடி, கிழக்கு உயர்ந்து மேற்கு சரிவாக இருந்தால், குடும்ப தலைவருக்கு சிக்கல் வந்துவிடுமாம். உடல்நல பாதிப்பு, பொருளாதார தடங்கல், இளைய மகனுக்கு கல்வியில் மந்தம் இப்படி பல்வேறு பாதிப்புகள் வரலாம். அதேபோல, வடக்கு உயர்ந்து தெற்கு சரிவாக இருக்கக்கூடாது. அப்படி அமைந்துவிட்டால், குடும்பத்தில் பெண்ணுக்கு உடல்நல பாதிப்பு, மகளுக்கு செலவுகள், சண்டைகள், பகைகள் ஏற்படலாம். கிடைக்கக்கூடிய கடனுதவி உட்பட எதுவுமே கிடைக்காமல் போய்விடுமாம்.

செவ்வகம், சதுரம் வடிவம்: மொத்தத்தில், ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டிடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்... மனை இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்கக்கூடாது. கட்டிடம் கட்டும்போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியைவிட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் வேண்டும்.

வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருந்தால் குடும்பத்துக்கு நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

கோபுரத்தின் நிழல்: அதேபோல, மனையின் எதிரில் ஒற்றை பனைமரம், கிணறு, ஆலமரம் எருக்கன் செடி, இல்லாமல் இருக்க வேண்டும்... கோவில் கோபுரத்தின் நிழல், அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழக்கூடாது.. பாம்பு புற்று, ஆமையின் ஓடு, உடும்பின் சடலம் போன்றவையும் மனையில் இருக்க கூடாது. பெருமாள் கோவிலின் பின்புறம், சிவன் / கணபதி கோவில் முன் புறமும் வீடு கட்டவே கூடாது.

வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருந்தால் நல்லது... மனையில் வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தலாம்.. ஆனால், வீட்டின் நடுவிலோ அல்லது மற்ற திசைகளிலோ அமையும் கிணறு, பம்ப் கெடுதலையே தரும்.

ஈசானிய மூலை: ஈசானிய மூலை காலியாக இருந்தால் பஞ்சபூத ஆற்றல் கிடைக்கும்.. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் இருக்கலாம்.. ஆனால், அவைகள் இரட்டைப்படையில் இருக்கும்படி பார்த்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+