செல்வத்தை பெருக்கும் மா இலை.. பணம், மகிழ்ச்சிக்கு உதவும் மாவிலை தோரணம்.. வாஸ்து குறைபாட்டை நீக்கும்
சென்னை: மாவிலைகளை வாசலில் கட்டி வைப்பது ஏன் தெரியுமா? வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும், பூஜைகளிலும் மாவிலைகளின் முக்கியத்துவங்கள் என்னென்ன தெரியுமா? ஆன்மீகம் மட்டுமல்ல, அறிவியல் நன்மைகளையும் இந்த மாவிலைகள் தருகின்றன. பல்வேறு எளிய பரிகாரங்களுக்கும் உதவியாக திகழ்ந்து வருகின்றன. இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக பார்ப்போம்.
மாவிலைகள். காய்ந்துபோனாலும்கூட, அதன் மகத்துவத்தை இழப்பதில்லை.. அதாவது மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சுழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைக்கு இருக்கிறதாம். மாவிலைகள் பொதுவாக, காற்றை சுத்தப்படுத்தக்கூடியது. எனவே, மாவிலைகள் உள்ள இடத்தில் சுத்தமான காற்றை நம்மால் சுவாசிக்க முடியும், இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

மருத்துவ ஆச்சரியங்கள்
மாவிலைகள் மிகச்சிறந்த கிருமிநாசினியும்கூட.. அதனால்தான், வீட்டு வாசலில் மாவிலைகளை தோரணமாக கட்டி வைக்கும் பழக்கத்தை முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர். வாசலில் இந்த இலைகளை கட்டுவதால், தோஷங்கள், கண்திருஷ்டிகள் நீங்கிவிடும். வீட்டிற்குள் வரும் காற்றும் நச்சுத்தன்மை இல்லாமல் இருக்கும்.
எதிர்மறை எண்ணங்களையும் விலக்கிவிடும். உடலிலுள்ள நெகடிவ் எனர்ஜியையும் கிரகித்துக் கொண்டு, வீட்டிற்குள் பாசிட்டிவ் எண்ணத்தை படரச் செய்யும் ஆற்றல் மாவிலை தோரணத்திற்கு உண்டு
அதாவது, மாவிலை தோரணம் உள்ள வீட்டை பார்க்கும் தேவர்கள், அந்த வீட்டிற்குள் நுழைய முடிவு செய்வார்களாம்.. இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிஷ்டம் கிடைக்கும் என்பதுடன், வீட்டில் யாருக்காவது வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் இந்த தோரணம் நீங்க செய்துவிடும் என்பது ஐதீகமாக உள்ளது.
மகாலட்சுமியின் வாசம்
மாவிலைகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதனால்தான், கலசம் வைத்து பூஜையின் முடிவில் மாவிலை மூலம் கலச நீரை தெளிப்பது, கலச நீரை குடிப்பது, போன்ற செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. மாவிலைகள் போடப்பட்ட கலச நீரில் பிராண வாயுவின் அளவு நிறைந்திருப்பதால், இதை குடிப்பது சிறந்த ஆரோக்கியமாகும்.
மந்திரத்தை உள்வாங்கி வைத்துக் கொள்ள கூடிய சக்தி மாவிலைகளுக்கு இருப்பதால்தான், கலசத்தில் உள்ள தீர்த்தங்கள் தெளிப்பதற்கும், தோஷங்களை போக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆஞ்சநேயர், விநாயகர் அருளை பெற
அதற்காக வீட்டின் நிலைவாசலில், பிளாஸ்டிக் இலைகளை தோரணமாக கட்டக்கூடாது. நிலைவாசலில மட்டுமல்லாமல, பூஜையறையிலும் மாவிளக்குகளால் அலங்கரிக்கலாம்.. அதேபோல, பிள்ளையார் சிலைக்கு அருகில் மா இலைகளை செலுத்தி வந்தால், பணக்கஷ்டம் இருக்காது என்பார்கள். ஆஞ்சநேயர் கோயிலில் தினமும் ஒரு மா இலையை சந்தனத்தால் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதி அர்ச்சனை செய்து வந்தால், ஹனுமனின் ஆசியை பெறலாம்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications