Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடெங்கும் ஆனந்தம்... நிம்மதியும் மகிழ்ச்சியும் குடியேற இதை செய்யுங்கள்.. வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சில வீடுகளில் ஆடம்பரத்திற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவித்திருப்பார்கள். பணமும் பொருளும் அதிகம் நிறைந்திருக்கும் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்காது. மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். மகிழ்ச்சியும் நிம்மதியும் குடியேற என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் சுத்தம், தூய்மை இருக்கிறதோ, அங்கு மகாலட்சுமி தாயாரை காணலாம். எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவு, கூச்சல் இல்லாமல் சந்தோஷம், நிம்மதி இருக்கிறதோ அங்கே அவள் நிரந்தரமாக வாசம் செய்வாள்.

Vastu tips for peace and prosperity at your home

சண்டை இல்லாத வீட்டில்தான் மகாலட்சுமி தங்குவாள். எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன் என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

வீட்டில் சில்லறை நாணயங்களை ஒருபோதும் ஆங்காங்கே சிதற விடக்கூடாது. நாணயங்கள் கீழே தரையில் தூக்கி வீசக்கூடாது. தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் தவறு நமக்கு வறுமையை கொண்டு வந்து விடும். அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

ரூபாய் நோட்டுகளை விட சில்லறை நாணயங்களுக்கு மதிப்பு அதிகம். செல்வாதிபதி குபேரனுக்கு கூட சில்லரை நாணயங்களால் அர்ச்சனை செய்தால் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருகும். அதே போல மகாலட்சுமிக்கும் நாணய அர்ச்சனை மிகவும் பிடிக்கும். 5 ரூபாய் நாணயம் கொண்டு அர்ச்சனை செய்தால் அன்னை மகாலட்சுமியின் மனம் மகிழ்ச்சியடையும்.

சிலர் சண்டை போடும் போது உணவையோ, பணத்தையோ தூக்கி வீசுவார்கள். சிலர் ஆணவத்தில் பணத்தை கிழிப்பார்கள். எனவே ஒருபோதும் அந்த தவறை செய்யாதீர்கள். குடும்பத்தில் வருமான தடை, தொழில் பாதிப்புகள், புதிய தொழில் துவங்கியிருந்தால் அதில் நஷ்டங்கள், இழப்புகள் போன்றவை ஏற்படக்கூடும் எனவே நாணயங்களை கண்டிப்பாக தூக்கி எறிய கூடாது.

சில்லறை நாணயங்களுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. ரூபாய் நோட்டுகளை விட உலோகத்தால் ஆன இந்த நாணயங்கள் மகாலட்சுமிக்கு ரொம்பவும் இஷ்டமான பொருளாக இருக்கிறது. இதன் ஓசை எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கெல்லாம் குபேர வாசம் உண்டாகும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

சில்லரை நாணயங்கள், கொலுசு சத்தம், மெட்டி தரையில் படும் ஓசை, வளையல் ஓசை, பூஜை மணி அடிக்கும் ஓசை, மழலை சத்தம், பெண்களின் சிரிப்பு சத்தம் இவை எல்லாம் ஒரு வீட்டில் மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் சத்தங்கள் ஆகும். எந்த வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்திருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.

மணம் வீசும் மலர்கள்.. நறுமணம் வீசும் இடங்களிலும் அன்னை மகாலட்சுமி வாசம் செய்வாள். நாம் பேசும் வார்த்தைகள் நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும். முடியாது நடக்காது என்று ஒருபோதும் சொல்லக்கூடாது. எல்லோருக்கும் உதவும் எண்ணத்தோடு செய்யும் செயல்களும் அன்னை மகாலட்சுமியின் அருளை நமக்கு கிடைக்கச் செய்யும்.

அதே நேரத்தில் நாம் சில பொருட்களை தானம் செய்யக்கூடாது. மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய துடைப்பத்தை தானமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் பணப்பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தீர்கள் எனில் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டை தேடி வரும். பழைய உணவுகளை தானமாக கொடுத்தீர்கள் எனில் வரவுக்கு மீறிய செலவுகள் வரும். எனவே எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்று பொருட்களையும் தானமாக கொடுத்து சிரமங்களை விலை கொடுத்து வாங்கி கொள்ளாதீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+