உங்கள் பெயரின் முதல் எழுத்து C யில் தொடங்குதா? நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? சரியானு பாருங்க!
சென்னை: உங்கள் பெயரின் முதல் எழுத்து C என்ற ஆங்கில எழுத்தின் தொடக்கமாக இருந்தால் உங்கள் குணாதிசயங்கள் என்ன என்பதை நாங்கள் சொல்லட்டுமா?
ஆங்கில அகர வரிசையில் 3ஆவது எழுத்து! இந்த சி என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்திருப்போர் புதிதாக யோசிப்பவர்கள், கற்பனை திறன் கொண்டவர்கள், நம்பிக்கையானவர்கள், அனைவரையும் கவரும் தன்மை கொண்டவர்கள்.

இயற்கையாகவே அழகு கொண்டவர்கள், மற்றவர்களை விட அதிக பர்சனலாலிட்டியுடன் இருப்பார்கள். தனித்துவத்துடன் புதுமையானவற்றை உலகிற்கு கொண்டு வர நினைப்பார்கள்.
பிரச்சினைகளை சரி செய்வதில் வல்லவர்கள். சிறந்த உரையாடல்களை நடத்துவார்கள். அனைத்து மக்களுடன் எளிதாக இணையும் தன்மை கொண்டவர்கள். அடுத்தவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். கஷ்டத்தில் இருப்போர் மீது பரிதாபப்படுவார்கள். அது போல் அடுத்தவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வார்கள்.
இரக்க குணம் கொண்டவர்கள். உதவி என கேட்டால் ஓடோடி வருவார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்கள். அவர்களின் திறமைகளின் மேல் நம்பிக்கை உள்ளதால் ரிஸ்க் எடுக்க பயப்பட மாட்டார்கள். அவர்கள் தேர்வு செய்த துறையில் சிறந்தவர்களாக விளங்குவர். இலக்கை அடைய கடினமாக உழைக்க தயங்கவே மாட்டார்கள்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உண்டு. அது போல் விளையாட்டுகளிலும் ஈடுபாட்டை காட்டுவார்கள். ரொமான்டிக்கான நபர்களாக இருப்பர். C என்ற எழுத்தை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் தேர்வு செய்யும் துறைகள் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், கவுன்சிலிங் செய்வோர், ஆசிரியர், வழக்கறிஞர், நிதி ஆய்வாளர், செவிலியர், மனித வள மேம்பாட்டாளர், புகைப்படக் கலைஞர், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறை உள்ளிட்டவைகளில் பணியாற்றுவார்கள்.
தெய்வ பக்தி உள்ளவர்கள். ரகசியத்தை கட்டி காப்பாற்றுவார்கள். குழந்தைகள் மீது பாசத்தையும் பெரியவர்களிடம் அன்பையும் பொழிவார்கள். தேச பக்தி கொண்டவர்கள். அசைவ உணவை விரும்பாதவர்கள். இனிப்பை நன்றாக சாப்பிடுவார்கள். மற்றவர்கள் பொறாமைப்படக் கூடிய அளவுக்கு செயல்களை செய்வார்கள்.
நேர்மையான குணம் கொண்டவர்கள், ஒழுக்கமும் கட்டுப்பாடுகளையும் கொண்டவர்கள். அரசு பணியிலும் ஆன்மீக பணியிலும் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு மூளை பலம் அதிகமாக இருக்கும். மிகப் பெரிய கல்வியாளர்களாக இருப்பார்கள். கணினி துறையிலும் வல்லவர்கள். வியூகம் அமைப்பதிலும் திறமை கொண்டவர்கள். அனாவசிய செலவுகளை செய்ய மாட்டீர்கள். உங்களின் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க மாட்டீர்கள். உங்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியங்கள் அதிகமாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications