இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகையின் தனிச்சிறப்பு என்ன? திருமண தடை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: ஆடிக் கிருத்திகை என்றால் என்ன, அன்றைய தினம் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இன்று ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: முருகனுக்கு எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும், தை மாதத்தில் வரக்கூடிய தை பூசம், ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி கிருத்திகை மற்றும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் உடன் கூடிய கார்த்திகை விரதம் இந்த வழிபாடுகள் முருகனுக்கு உகந்த வழிபாடாகும்.

இந்த நாட்களில் முருகன் இருக்கும் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் விசேஷங்கள் நடைபெறும்.
முருகர் கடவுளை நாம் வேண்டிக் கொண்டால், அவர் நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார். இந்த வருடம் ஆடி கிருத்திகைக்கு தனிச் சிறப்பு உள்ளது. இந்த ஆடி கிருத்திகை செவ்வாய்க்கிழமை அன்றும் தொடர்கிறது.
குறிப்பாக கிரக தோஷம், நாக தோஷம், திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தைகள் இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் முருகனை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும். நிலப் பிரச்சனை இருந்தால், முருகனை வழிபட்டால் பிரச்சனை நீங்கும். அனைத்து வயதினரும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
காலையில் எழுந்து தலைக்கு குளித்து, பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு மேடையில் சிவப்பு துணியை வைத்து, அதற்கு மேலாக முருகனின் படத்தை வைக்கவும். வேல் இருந்தாலும் அத்துடன் வைக்கலாம். சிவப்பு நிறம் கொண்ட மலர்களை நெய் வைத்தியம் செய்ய வேண்டும். செவ்வலரி பூவை நாம் நெய் வைத்தியம் செய்ய வேண்டும். அல்லது சிவப்பு ரோஜாக்களை வைத்து நெய் வைத்தியம் செய்யலாம். உப்பு இல்லாமல் சமைக்க வேண்டும். மதியம் மட்டும் பால், பழங்கள் சாப்பிடலாம்.
முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம். அப்படி செய்யும் போது புஷ்பம், பன்னீர், பஞ்சாமிர்தம் கொண்டு செய்யலாம். வருகின்ற ஜூலை 30ம் தேதி ஆடி கிருத்திகை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை விரதம் வரை விரதம் மேற்கொண்டு பின்பு அதை முடித்து கொள்ளலாம். இல்லையென்றால் 30ம் தேதி அன்று விரதம் மேற்கொள்ளலாம்.
முதலில் வீட்டில் வழிபாடு செய்து, பிறகு கோவிலுக்கும் செல்லலாம். விரதம் இருக்க முடியவில்லை என்றால், முருகப் பெருமான் மந்திரங்களை நாம் சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications