இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகையின் தனிச்சிறப்பு என்ன? திருமண தடை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: ஆடிக் கிருத்திகை என்றால் என்ன, அன்றைய தினம் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இன்று ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: முருகனுக்கு எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும், தை மாதத்தில் வரக்கூடிய தை பூசம், ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி கிருத்திகை மற்றும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் உடன் கூடிய கார்த்திகை விரதம் இந்த வழிபாடுகள் முருகனுக்கு உகந்த வழிபாடாகும்.

இந்த நாட்களில் முருகன் இருக்கும் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் விசேஷங்கள் நடைபெறும்.
முருகர் கடவுளை நாம் வேண்டிக் கொண்டால், அவர் நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார். இந்த வருடம் ஆடி கிருத்திகைக்கு தனிச் சிறப்பு உள்ளது. இந்த ஆடி கிருத்திகை செவ்வாய்க்கிழமை அன்றும் தொடர்கிறது.
குறிப்பாக கிரக தோஷம், நாக தோஷம், திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தைகள் இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் முருகனை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும். நிலப் பிரச்சனை இருந்தால், முருகனை வழிபட்டால் பிரச்சனை நீங்கும். அனைத்து வயதினரும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
காலையில் எழுந்து தலைக்கு குளித்து, பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு மேடையில் சிவப்பு துணியை வைத்து, அதற்கு மேலாக முருகனின் படத்தை வைக்கவும். வேல் இருந்தாலும் அத்துடன் வைக்கலாம். சிவப்பு நிறம் கொண்ட மலர்களை நெய் வைத்தியம் செய்ய வேண்டும். செவ்வலரி பூவை நாம் நெய் வைத்தியம் செய்ய வேண்டும். அல்லது சிவப்பு ரோஜாக்களை வைத்து நெய் வைத்தியம் செய்யலாம். உப்பு இல்லாமல் சமைக்க வேண்டும். மதியம் மட்டும் பால், பழங்கள் சாப்பிடலாம்.
முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம். அப்படி செய்யும் போது புஷ்பம், பன்னீர், பஞ்சாமிர்தம் கொண்டு செய்யலாம். வருகின்ற ஜூலை 30ம் தேதி ஆடி கிருத்திகை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை விரதம் வரை விரதம் மேற்கொண்டு பின்பு அதை முடித்து கொள்ளலாம். இல்லையென்றால் 30ம் தேதி அன்று விரதம் மேற்கொள்ளலாம்.
முதலில் வீட்டில் வழிபாடு செய்து, பிறகு கோவிலுக்கும் செல்லலாம். விரதம் இருக்க முடியவில்லை என்றால், முருகப் பெருமான் மந்திரங்களை நாம் சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications