Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று அபூர்வ நாள்.. எல்லாமே 8 ஆதிக்கம்.. 2024= 2+0+2+4= 8, ஆகஸ்ட் 8, இரவு 8 மணிக்கு என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 8ஆம் தேதி (8.8.2024 , 2024இன் கூட்டுத் தொகையும் 8 வருகிறது) இன்றைய தினம் சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கப்படுகிறது, இதனால் காலை 8.08 மணிக்கும் இரவு 8.08 மணிக்கும் நமது ஆசைகளை எழுதி வைத்தால் அது நிறைவேற்றும் என்ற தகவல் பரவி வருகிறது. இது ஜோதிட ரீதியில் உண்மையா என்பதை பார்ப்போம்.

ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது சிறப்பான நாளாக அமையும். அதாவது அந்த நாளின் இலக்கத்திலேயே ஏதாவது ஒரு புதுமை இருக்கும். உதாரணமாக 2012 ஆம் ஆண்டு 12.12.12 என டிசம்பர் 12 ஆம் தேதியை எழுதி கொண்டாடினர்.

spirtuality

அன்றைய தினம் ஸ்பெஷல் நாளாக இருந்ததால் பலர் வாகனம் வாங்குதல், நகை வாங்குதல், புதிய வீட்டிற்கு குடிபோதல் உள்ளிட்ட செயல்களை செய்தனர். அந்த வகையில் இந்த முறை ஆகஸ்ட் 8ஆம் தேதி அதாவது 8.8.2024 (2024 இன் கூட்டுத் தொகையும் 8ஆக வருகிறது.) இன்றைய நாள் சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் என்றும் இந்த நாளில் எல்லா நலமும் வளமும் கிடைக்கும் என்றும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்றைய தினம் காலை 8.08 மணிக்கும் இரவு 8.08 மணிக்கும் இன்பினிட்டியை வரைந்து வைத்துவிட்டு உங்களுக்கு வேண்டியதை எழுதி வைத்துக் கொண்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும், பிரார்த்தனைகள் கைகூடும் என்றும் ஒரு தகவல் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.

ஜோதிட ரீதியில் பார்க்க வேண்டும் என்றால் ஆகஸ்ட் 8ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு அதாவது அவருடைய சொந்த வீட்டிற்கு வரக் கூடிய நுழைவு வாயில் திறக்கிறது. இந்த ஆடி மாதத்தில் சூரியனின் ராசியான சிம்மத்திற்கு உள்ளே நுழையும் காலமாகும். சிம்மம் என்றால் சிங்கம், அதனால்தான் சிங்கத்தின் நுழைவு வாயில் திறக்கும் என கூறி ஒரு தகவலை பரப்பி வருகிறார்கள்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் சூரியன் வரும் 10ஆம் தேதிதான் சிம்ம ராசிக்குள் நுழைய போகிறது. இன்றைய தினம் எந்தவித விசேஷ சக்தியும் கிடைக்காது. ஆகஸ்ட் 8ஆம் தேதி கூட ஓகே, ஆனால் 8 மணிக்கு என்பதை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு நாட்டில் நேரம் மாறுபடும் எனும் போது இது எப்படி சாத்தியமாகும். எனவே இது போன்றவற்றை எல்லாம் யாரும் நம்ப வேண்டாம். எப்போதும் மனதார பிரார்த்தனை வைத்தாலே அதை கடவுள் கேட்பார் என்பார்கள்.

எல்லா நாளும் இனிய நாள் என்று நினைத்து உங்கள் பிரார்த்தனைகளை கடவுளிடம் சொல்லுங்கள். அதுவே போதும். மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களை விதையுங்கள். அதுவும் உங்களுக்கு நன்மையை தரும். இந்த 2024 இலும் தேவையற்ற மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என ஜோதிடர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+