எலுமிச்சையை பாதியாக அறுத்து! ஒரு மூடியில் குங்குமம்! மறுமூடியில் மஞ்சள் தடவி வைப்பது ஏன்?
சென்னை: வீட்டு வாசற்படி அருகே குங்குமம், மஞ்சள் தடவிய எலுமிச்சை பழங்களை வைப்பது ஏன் என்பது தெரியுமா?
எலுமிச்சை பழம் உடல்நலனுக்கு உகந்த பழம். இது குளிர்ச்சியை தரும். மேலும் இது ஆன்மீக ரீதியாகவும் நல்ல பலன்களை கொடுக்கிறது. கோயில்களில் எலுமிச்சை பழம் கொடுக்கிறார்கள். அது போல் கண் திருஷ்டிக்காகவும் இந்த எலுமிச்சைகள் பயன்படுகின்றன.

அம்மன் கோயில் திருவிழாக்களில் சாமியாடிகளுக்கு அருள் வருவதற்காக எலுமிச்சை பழத்தை பிழிவார்கள். பொதுவாக எலுமிச்சை பழத்தை தேவகனி என்றும் தெய்வ கனி என்றும் அழைப்பார்கள்.
எலுமிச்சை பழம் நல்ல சக்தியை பெற்று தீய சக்தியை ஏவிவிடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில்களில் இந்த எலுமிச்சை பழங்கள் நல்ல சக்தியை கொடுக்கின்றன. இதே வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை கெட்ட சக்தியை ஒழித்துவிட்டு நேர்மறை சக்தியை அதிகரிக்கிறது.
அது போல் இந்த எலுமிச்சைக்கு வேத மந்திரங்களை உள்ளே கிரகித்துக் கொள்ளும் சக்தியும் உண்டு. இந்த எலுமிச்சை பழங்கள் நல்ல காரியங்கள் கை கூட உதவுகிறது. தெய்வ வழிபாட்டில் இந்த எலுமிச்சையை கொண்டு மாலையாக சாத்தும் பழக்கமும் உண்டு. துர்க்கை அம்மன், பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களுக்கு இந்த எலுமிச்சை மாலை சாத்துவார்கள்.
உக்கிர தெய்வங்களான துர்க்கை, பத்ரகாளி ஆகிய தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சாத்துவதால் நீண்ட நாள் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும் என்று சொல்வதுண்டு. அது போல் துர்க்கைக்கு ராவுகாலத்தில் எலுமிச்சையால் விளக்கு ஏற்றினாலும் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். திருஷ்டிக்காகவும் இந்த எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் கட்டுவார்கள்.

அதாவது எலுமிச்சை பழத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து கட்டுவார்கள். சிலர் எலுமிச்சை பழத்துடன் காய்ந்த மிளகாயையும் வைத்து கட்டுவார்கள். இவற்றை கட்டுவதால் கெட்ட சக்திகள் வெளியே சென்றுவிடும் என்பது ஐதீகம். அது போல் வீட்டு வாசலில் இரு புறமும் எலுமிச்சை பழத்தை சரிபாதியாக வெட்டி ஒன்றில் மஞ்சளும் மற்றொன்றில் குங்குமமும் தேய்த்து எடுத்து வைக்க வேண்டும்.
இதனால் வீட்டுக்கு வருவோர் அந்த எலுமிச்சை பழத்தை பார்த்தாலே அவர்கள் கவனம் அதில் ஈர்க்கப்பட்டுவிடும். அதனால் திருஷ்டி ஏற்படாது. எலுமிச்சை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த எலுமிச்சை பழம், மனிதனின் ஆயுள் காலத்தை நீட்டிக்கும்.
-
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications