முடங்கியது ஜியோ.. பல பகுதிகளில் "நோ சர்வீஸ்" மெசேஜ்.. கால், நெட் கூட பயன்படுத்த முடியவில்லையாம்!
மும்பை: நமது நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஜியோவின் சேவை பல இடங்களில் முடங்கியுள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் கால் பேசுவது, நெட் பயன்படுத்துவது போன்ற அடிப்படை சேவைகளைக் கூடச் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டின் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று ஜியோ. இந்நிறுவனம் நமது நாட்டின் டெலிகாம் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஜியோ ஏற்படுத்தியுள்ளது. ஜியோ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சீராக அதிகரித்தே வருகிறது.

இதற்கிடையே இன்று நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜியோ டெலிகாம் தளம் முடங்கியுள்ளது. குறிப்பாக மும்பை பகுதியில் ஜியோ சேவை பெரியளவில் முடங்கியுள்ளது.
இது தவிர வேறு பல பிராந்தியங்களிலும் ஜியோ சேவை முடங்கியுள்ளன. இதனால் அங்குப் பலருக்கும் மொபைல் சர்வீஸ் கிடைக்கவில்லை. சாதாரணமாக நெட் சேவையை யூஸ் செய்வது, கால் பேசுவது உள்ளிட்ட சேவைகளைக் கூட பயன்படுத்த முடியவில்லையாம்.
இந்த விவகாரம் குறித்து ஜியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேநேரம் நெட்டிசன்கள் பலரும் தங்களால் எந்தவொரு சேவையையும் பயன்படுத்த முடியவில்லை என்று புலம்பித் தள்ளி வருகிறார்கள்.
இது குறித்து டவுன் டிடெக்டரின் என்ற டெக் நிறுவனம் கூறுகையில், "மும்பை மற்றும் பிற பிராந்தியங்களில் ஜியோ செயலிழப்பு காணப்படுகிறது. ஜியோ செயலி கூட வேலை செய்யவில்லை. மும்பை முழுவதும் ஜியோ மொபைல் சேவை முடங்கியுள்ளது... சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய செயலிழப்பாக இது இருக்கிறது" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications