மலிவு விலை ரீசார்ஜ் பிளான் திரும்ப வருது.. வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஸ்வீட் ஷாக் கொடுத்த ஜியோ!
சென்னை: ஜியோ நிறுவனம் ரூ.199 ரீசார்ஜ் பிளானை தொடர்ந்து, தற்போது குறைந்த விலை ரீசார்ஜ் பிளான்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக மலிவு விலையில் மற்றொரு ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்புது ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், எந்தவித டேட்டாவும் இல்லாமல், வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டுமே உள்ளடக்கிய ரூ.189 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது ரூ.189க்கு இலவச வாய்ஸ் கால் மற்றும் பிற டேட்டா சலுகைகளுடன் ஒரு மலிவு விலை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
ஜியோ வழங்கும் ரூ.189 ப்ரீபெய்ட் பிளான், 28 நாள் வேலிடிட்டி உடன், 300 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதன்பிறகு 64Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும்.
கூடுதலாக, இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் மெம்பர்ஷிப் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேசமயம், ஜியோ சினிமா பிரீமியம் இந்த பிளானுடன் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரீசார்ஜ் திட்டம், விலை உயர்வுக்கு முன்பு 155 ரூபாய் பிளானாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த விலை ஏற்றத்துக்குப் பிறகு இப்போது அந்த பிளான் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. ரூ.199 பிளானுக்கு அடுத்தபடியாக தற்போது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மற்றொரு பிளான் தான் இந்த ரூ.189 ரீசார்ஜ் பிளான்.
அதே நேரத்தில் ரூ.199 பிளான், 18 நாள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம், நீண்ட வேலிடிட்டியுடன் கூடிய மேலும் சில ரீசார்ஜ் பிளான்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications