Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பானிக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்.. ஜியோவுக்கு விழுந்த பெரிய அடி! இதை யாருமே எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் சந்தை இருப்பை அதிகரிக்கத் தொடர்ச்சியாக முயன்று வருகிறது. இப்போது ஏர்டெல், ஜியோ இடையே தான் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக சில சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆக்டிவ் யூசர் பிரிவில் ஏர்டெல்லை ஜியோ காலி செய்துவிட்டது. ஆனால், மற்றொரு முக்கிய பிரிவில் ஏர்டெல் தான் கிங்காக இருந்து வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு இணையச் சேவையை பெரும்பாலும் மக்கள் செல்போன் மூலமாகவே பயன்படுத்துகிறார்கள். இதனால் செல்போன் கட்டணம் என்பது ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது.

airtel jio

டெலிகாம் நிறுவனங்கள்:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டில் ஏகப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் இருந்தன. ஆனால், ஜியோவின் வருகைக்குப் பிறகு நஷ்டத்தால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இப்போது நமது நாட்டில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய தனியார் நிறுவனங்களும் பிஎஸ்என்எல் அரசு நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் உள்ளன. இவர்கள் யூசர்களை பிடிக்க மிகக் கடுமையாக முயன்று வருகிறார்கள்.

நமது நாட்டில் டெலிகாம் சந்தையை முறைப்படுத்தும் டிராய் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் எந்த நிறுவனத்திடம் எவ்வளவு யூசர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களைப் பகிரும். அதன்படி, கடந்த அக். மாதத்திற்கான டேட்டாவை டிராய் அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் சில சுவாரசிய முடிவுகள் கிடைத்துள்ளன.

ஆக்டிவ் யூசர்கள்:

அதாவது எந்தவொரு நெட்வோர்க்கிற்கும் ஆக்டிவ் யூசர்கள் என்பது ரொம்பவே முக்கியம். மாதாமாதம் யாரெல்லாம் ரீசார்ஜ் செய்கிறார்களோ அவர்கள் தான் ஆக்டிவ் யூசர்கள் என்று அழைக்கப்படுவார்கள். கடந்த அக். மாதம் ஜியா தான் அதிகபட்ச ஆக்டிவ் யூசர்களை சேர்த்துள்ளது. ஜியோ அதிகபட்சமாக 38.4 லட்சம் ஆக்டிவ் யூசர்களை சேர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜியோ 27.2 லட்சம் ஆக்டிவ் யூசர்களை தனது நெட்வோர்க்கில் இணைத்துள்ளது.

அதிர்ச்சி தந்த ஏர்டெல்:

மறுபுறம் மிக முக்கியமான 4ஜி/ 5ஜி பிரிவில் ஜியோவுக்கு பெரிய அடி விழுந்துள்ளது. இந்த 4ஜி/ 5ஜி பிரிவில் இருப்போர் தான் எப்போதும் அதிக தொகைக்கு ரீசாரஜ் செய்வார்கள். அதாவது நிறுவனத்திற்கு அதிக வருவாயைத் தரும் பிரிவாக இது இருக்கும். எனவே, இந்த பிரிவில் எத்தனை யூசர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படும். இந்த முக்கியமான பிரிவில் ஏர்டெல் நிறுவனம் 20.8 லட்சம் யூசர்களை புதிதாக இணைத்துள்ளது. அதேநேரம் ஜியோ நிறுவனம் இந்த பிரிவில் சுமார் 37 லட்சம் யூசர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது ஆக்டிவ் யூசர்கள் பிரிவில் என்ன தான் ஏர்டெலை ஜியோ வீழ்த்தினாலும் கூட அதிக வருவாயை அளிக்கும் 4ஜி/ 5ஜி பிரிவில் ஏர்டெல் தான் முன்னணியில் இருக்கிறது.

பிஎஸ்என்எல்:

கடந்த ஜூலை மாதம் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின. இதன் காரணமாக அதன் பிறகு தொடர்ச்சியாக அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் யூசர்களை இழந்து வந்தன. அதேநேரம் மறுபுறம் பிஎஸ்என்எல் நிறுவனம் பக்கம் செல்லும் யூசர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+