வாவ்.. ராணி ஆல்யாவுக்குப் பொறந்தாச்சு குட்டி இளவரசி!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் புகழின் உச்சிக்கு சென்றார் ஆல்யா. இவருடன் இந்த சீரியலில் சேர்ந்து நடித்தவர் சஞ்சீவ்.
இருவரும் காதலித்து திருமணமும் செய்துக்கொண்டனர். இந்த நிலையில் இன்றைக்கு ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து இருக்கார் ஆல்யா,
திரையுலக பிரபலங்களும் , சின்னத்திரை பிரபலங்களும் மூவருக்கும் வாழ்த்து சொல்லி வரும் நிலையில் ரசிகர்களும் சேர்ந்து மூவருக்கும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
சஞ்சீவ் ஆல்யா
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடிச்ச ஆல்யாவுக்கு பள்ளி மாணவர்கள் கூட ஃபேன்சாகி சீரியலை ரசித்து பார்த்து வந்தனர்.கலைஞர் தொலைக் காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகம் ஆனவர் ஆல்யா . குளிர் 100 படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் சஞ்சீவ். இருவரும் சேர்ந்து நடித்த ராஜா ராணி சீரியல் ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்தது.
சீரியல் திருமணம்
சீரியலில் நடிக்கும்போதே இருவரும் காதலித்து வந்தனர். சீரியல் முடிவடையும் நேரத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் சீரியலும் முடிந்து போனது. திருமணம் முடிந்த சில வாரங்களில் ஆல்யா கர்ப்பமானார். குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும்... வேறு எந்த கமிட்மெண்டும் இல்லை என்று உறுதி செய்துக்கொண்ட ஆல்யா தாயாவதற்கு தன்னை தயார் செய்துக்கொண்டு வந்தார்.
விஜய் டிவி வளைக்காப்பு
காதல் திருணம் செய்துக்கொண்டார் என்று ஆல்யாவுடன் பெற்றோ பேசாமல் இருந்தனர். இந்த நிலையில் விஜய் டிவி ஆல்யாவுக்கு வளைக்காப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆல்யாவின் அப்பா, அம்மா, தங்கை மூவரும் வந்து கலந்துக்கொண்டு கோபத்தை மறந்து சந்தோஷமாக இருந்தனர்.
பெண் குழந்தை பிறந்தது
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆல்யா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா வெற்றி விழாவில் சஞ்சீவுடன் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை ஒளிபரப்பானது. இந்த நிலையில்தான் இன்று ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக இன்ஸ்டா பதிவு தெரிவிக்கிறது.