கடைசியாக அபிநய் சொன்ன வார்த்தை.. தாயை போலவே மகனுக்கும் நிலைமை! இறுதி வரை கூடவே வந்த நடிகர் பாலா
சென்னை: கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.. நீண்ட காலம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்னும் 2 நாளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது.. ஆனால், அதற்கு முன்பே அபிநய் இறந்துவிட்டார். திருமணம் செய்து கொள்ளாத அபிநய்க்கு வயது 44.
துள்ளுவதோ இளமை படத்தில் பலராலும் கவனிக்கப்பட்ட நடிகர் அபிநய், சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச் சோலை 2, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

அபிநய்யின் அம்மா, மலையாளத்தில் பிரபலமான நடிகை ராஜாமணி.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 110 படங்களுக்கு மேல், பல உச்ச நடிகர்களுடன் நடித்திருப்பவர்..
பரிதாபம் அபிநய்
அபிநய்யின் துள்ளுவதோ இளமை படம் முடித்ததுமே 9 புரடியூசர்கள் வீட்டில் வந்து உட்கார்ந்து விட்டார்களாம்.. பெட்டி நிறைய பணத்தை பார்த்ததுமே, அபிநய்க்கு தலைகால் புரியவில்லை.. அப்போது முதிர்ச்சியான சினிமா அனுபவம் கொண்ட, அவரது அம்மா, முதலில் கதையை கேளு. அதற்கு பிறகு ஒப்புக் கொள் என்று பலமுறை எச்சரித்திருக்கிறார்..
ஆனாலும் மளமளவென அட்வான்ஸை வாங்கி கொண்ட அபிநய், ஜங்ஷன் என்ற படத்தில் நடித்தார்.. 2வது படமே தோல்வி.. தியேட்டரில் ஒரு ஷோ மட்டுமே ஓடிய நிலையில்,
அட்வான்ஸ் தந்தவர்கள், யாரும் திரும்பி வரவேயில்லை.. அந்த ஒரேயொரு தோல்விதான் அபிநய்யை சர்ரென கீழே இறக்கிவிட்டது..
கடைசியாக கேட்ட அபிநய்
அத்துடன், ஆதரவாக இருந்த அபிநய்யின் அம்மாவும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. படவாய்ப்பு இல்லாமல், அம்மாவும் இல்லாமல் மதுவுக்கு அடிமையானார் அபிநய்.. இறுதியில் கல்லீரல் தொற்று பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டார்.. 2 ரூபாய்கூட இல்லாமல், அம்மா உணவகத்தில் சாப்பிடும் நிலைமைக்கே ஆளானார்.
கேபிஒய் பாலா உள்ளிட்ட நல்லுள்ளங்கள் அபிநய்யின் சிகிச்சைக்கு முன்வந்து உதவி செய்தனர்.. எனினும், அபிநய் தற்போது இறந்துவிட்டார்.
நேற்றிரவுகூட வீட்டு வாடகையை அனுப்பி வைக்கும்படி KPY பாலாவிடம் சொன்னாராம் அபிநய்.. பாலாவும் வாடகை பணத்தை உடனே அனுப்பி வைத்துள்ளார்.. இதுதான் அபிநய் கடைசியாக பேசியது.. இன்று காலையில் இறந்துவிட்டார் அபிநய்
பிரபலம் அம்மா
அன்று அபிநய்யின் அம்மா இறந்தபோது, அவரது சடலத்தை தூக்குவதற்குகூட யாருமே உடனில்லையாம்.. ஒரு பிரபல நடிகருக்கு போனை போட்டு, தன்னுடைய நிலைமையை கதறி அழுது சொன்னாராம் அபிநய்.. ஆனால், அந்த பிரபல நடிகர் எதுவுமே பேசாமல் போனை துண்டித்துவிட்டாராம். அப்போதுதான் விஜய் சேதுபதி அபிநய்-க்காக முன்வந்து உதவியிருக்கிறார்.
அன்று அபிநய்யின் அம்மாவுக்கு வந்த நிலைமைதான், இன்று அபிநய்க்கே ஏற்பட்டுள்ளது.. குடியின் உதவியை நாடி சென்ற அபிநய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தற்போது இறந்துவிட்டார். அபிநய்யின் இறுதி சடங்கு செய்ய சொந்தக்காரர்கள், நண்பர்கள் யாருமே வரவில்லையாம்.
இறுதி சடங்கு
பிறகு இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிட்டதுமே, அவரது உறவினர்கள் நடிகர் சங்கத்தை தொடர்பு கொண்டார்களாம். அதற்கு பிறகே அபிநயின் உடல், சென்னை ஏவிஎம் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராகின.. நிர்வாகக் குழு உறுப்பினர் பூச்சி முருகன், KPY பாலா உள்ளிட்ட சில நடிகர்கள்,இறுதி சடங்கிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். நடிகர் பாலா கடைசிவரை அபிநய்யின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
"சினிமா ஒரு நன்றி கெட்ட உலகம்,.. இங்கே கீழே விழுந்துவிட்டால், தூக்கிவிட யாருமே வரமாட்டார்கள் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன்" என்று அபிநய் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.. அது எவ்வளவு உண்மையான வார்த்தை???
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications