Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா கடைசியா போன் பண்ணி சொன்னது இதுதான்.. தங்கச்சியின் ஆசை.. கண்ணீரோடு மாரிமுத்துவின் மகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்.

அதாவது எதிர்நீச்சல் சீரியலில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு ஏற்பட்ட அசெளகரியம் காரணமாக அவர் மருத்துவமனைக்கு சென்று இருந்த நிலையில் அங்கு உயிரிழந்திருந்தார்.

Actor Marimuthu dies suddenly due to heart attack and he son explanation

இதனைத் தொடர்ந்து அவருடைய இறப்பு திரைத்துறையில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ச்சியாக சில நாட்களாகவே அவர் குறித்த நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதுபோல நடிகர் மாரிமுத்துவின் மகனும் தன்னுடைய தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் அவர் பல விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது அப்பாவிற்கு இப்படி ஆகும் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நாங்கள் மனதை திடப்படுத்திக் கொண்டாலும் அப்பா இறந்ததை தங்கையால் தான் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

மேலும் அப்பாவிற்கு நெஞ்சு வலி ஏற்கனவே வந்த சமயத்தில் நாங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டிலிருந்தார். அதனால் உடனடியாக எங்களால் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக முடிந்தது. அதோடு இந்த முறை தனக்கு நெஞ்சு வலிப்பதாக போன் செய்து இதற்கு முன்பு வந்ததை விட அதிகமாக வலிப்பதாகவும் கூறினார். இதனால் தான் நாங்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு போங்க, நாங்க அங்கு வந்து விடுகிறோம் என்றோம்.

அதுக்குள்ள இப்படி எல்லாம் ஆகும்னு நாங்க நினைக்கல. அதுபோல சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் என் தங்கைக்கு வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்பதுதான் அவங்க ஆசை. அந்த ஆசையை கண்டிப்பா நிறைவேற்றனும். ஏனென்றால் அப்பா இல்லாததால் எல்லாம் மாறிவிட்டதே என்று என்னுடைய தங்கையும் சரி என்னுடைய அம்மாவும் சரி வருத்தப்பட்டு விடக்கூடாது.

Actor Marimuthu dies suddenly due to heart attack and he son explanation

அவங்க இருவருக்கும் நான் இருக்கேன். எங்களுக்கு அவங்க இருக்காங்க. என்னால் முடிந்ததை நான் கண்டிப்பா செய்வேன் என்று மாரிமுத்துவின் மகன் அகிலன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அத்தோடு பல பேட்டிகளில் மாரிமுத்து தன்னுடைய குழந்தைகள் பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். தன்னுடைய மகன் படித்து நல்ல நிலைமையில் இப்போது இருக்கிறான் என்றும், தன்னுடைய மகளும் நல்ல வேலையில் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

என்னுடைய மகன் இப்போது மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான். என்னுடைய மகளும் நல்ல வேலையில் சம்பளத்தோடு இருக்கின்றனர். அதே நேரத்தில் நாங்கள் எல்லோருமே குடும்ப whatsapp குரூப் வைத்திருக்கிறோம். அதில் நாங்கள் நான்கு பேரும் மட்டும் தான் இருக்கிறோம்.

நான் வாங்கும் சம்பளம் யார் யாருக்கு என்ன பணம் கொடுக்க வேண்டும் எங்கிருந்து எனக்கு பணம் வந்திருக்கிறது என்ற எல்லா விவரங்களையும் அதில் நான் பதிவிடுவேன். என்னுடைய பிள்ளைகளும் அதில் தான் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மாரிமுத்து ஏற்கனவே போட்டிகளில் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+