பாண்டியனின் மகனா இது? மண்வாசனை பாண்டியன் கிட்ட ஒரேயொரு கெட்ட பழக்கம்.. அதுவும் அந்த கடைசி நேரத்தில்?
சென்னை: பணத்தோட அருமை என் அப்பாவுக்கு தெரியல.. யார் யாரை எந்தெந்த இடத்துல வைக்கணும்னு தெரியல. என் அப்பாவுக்கு இருந்த ஒரே கெட்ட பழக்கம் இதுதான்.. அதுமட்டும் இல்லேன்னா அவரை பிடிக்கவே முடியாது" என்று மறைந்த நடிகர் பாண்டியனின் மகன் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தில் அறிமுகமாகி, இந்த முதல் படத்திலேயே தமிழக மக்களின் ஆதரவை பெற்றவர் பாண்டியன்.. ஒரு கட்டத்தில் ஹீரோவாக மார்க்கெட்டை இழந்த பிறகு, கேரக்டர் நடிகராகவும் வலம் வந்தார்..

பின்னர், அரசியலில் ஈடுபட்டு பிரபல கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்து வந்தார். அரசியல் வட்டாரங்களில் சில நண்பர் பழக்கங்கள் ஏற்பட்டதையடுத்து, குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டதாம்..
துரோகிகளான நண்பர்கள்
ஒருகட்டத்தில், தன்னுடைய நண்பர்களுக்கு தன்னுடைய மொத்த சொத்தையும் விற்று உதவி செய்ததாகவும், ஆனால், பாண்டியனுக்கு அந்த நடிகர்கள் கடைசி காலத்தில் கை செலவுக்கு கூட காசு இல்லாமல் உதவாமல் விட்டுவிட்டதாகவும் தகவல்கள் உண்டு.
அதிகமாக குடித்து குடித்து, பாண்டியனின் கல்லீரலும் பாதிக்கப்பட்டு, கடந்த 2008ல் உயிரிழந்தார். மிக திறமையான நடிகரான பாண்டியன், நண்பர்களால் ஏமாந்து குடித்தே உயிரிழந்தவர் என்று சினிமா வட்டாரத்தில் சொல்வதுண்டு.
இந்நிலையில், Behindwoods TV யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் பாண்டியனின் மகன் ரகு... அந்த பேட்டியில், "தேனியில் ஒரு கூட்டத்தில் நின்று கொண்டிருந்த என் அப்பாவை பார்த்த பாரதிராஜா சார், தரையிலுள்ள மண்ணை எடுத்து, இதில் எத்தனை மண் இருக்கு" என்று கேட்டுள்ளார்.. உடனே என் அப்பா, "3500 இருக்கும்" என்றார். இதைக்கேட்ட பாரதிராஜா, "நீதான் என் படத்தின் ஹீரோ" என்று சொன்னதுமே ஆடிப்போயிட்டாராம்.
இது ஒன்னுதான் கெட்ட பழக்கம்
என் அப்பா நிறைய குடிப்பாரு.. குடிக்கு அடிமையாகிவிட்டாரு.. குடிப்பழக்கம் மட்டும் இல்லன்னா அவரை பிடிக்க முடியாது. அவர் ஒரு ரியல் ஹீரோ. வெகுளித்தனமானவர்.. அவரை வச்சி நிறைய பேரு பெரிய ஆளா வந்தாங்க. ஆனா கடைசி நேரத்துல கைகொடுக்காம போயிட்டாங்க. நல்ல பழகுற மாதிரி பழகி, அவரை டவுன் ஆக்கிட்டு பெரிய ஆளா வந்துருக்காங்க. அது நிறைய பேர் இருக்காங்க. இதுல என் அப்பா மட்டும் இல்ல. ஏகப்பட்ட பேர் இருக்காங்க.
பணத்தின் அருமை தெரியல
பணத்தோட அருமை என் அப்பாவுக்கு தெரியல.. யார் யாரை எந்தெந்த இடத்துல வைக்கணும்னு தெரியல. பாரதிராஜா சார், டி.ராஜேந்தர் சார், பிரபு பெரியப்பா, கார்த்திக் சார் இவங்க எல்லாம் உள்ளே வந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் இதான் ஃபீல்டு. பணம் இருந்தா தான் வருவாங்க.
யாருக்கும் கொடுத்து உதவாமலும் இருக்க முடியாது.. கஞ்சமாகவும் இருக்க முடியாது. அந்த நேரத்துல என்ன தோணுதோ, அதை செஞ்சிட்டு போயிடலாம்னு நினைச்சாரு. ஆனா எங்க அப்பாவுக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. பக்கபலமா அப்படி ஆளுங்களும் இல்லை. அப்பாவுக்குப் பிறகு பெரியப்பா, பாட்டியும் பக்கபலமாகவும் இருந்தாங்க.. அவங்களும் இறந்துட்டாங்க.
கடவுள் எனக்கு தந்த வரம்
அம்மாதான் வளர்த்து என்னை படிக்க வச்சாங்க... அப்பா இறக்கும்போது, நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன்.. பட வாய்ப்புக்காக 25 கம்பெனிகள் நான் ஏறி இறங்கி இருக்கேன்.. எனக்கு 2 படம் வாய்ப்பும் வந்தது. ஆனால், அதை சரியாக கையாள தெரியல..
அப்பா நடிச்சதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச படம் மண்வாசனை. முதல் வசந்தம், ஆண்களை நம்பாதே, படங்கள் ரொம்ப பிடிக்கும். அப்பாவும் நானும் சூர்ய வம்சம், வாரணம் ஆயிரம் படங்கள் சேர்ந்து பார்த்துருக்கோம்.. அப்பாவைப் பார்த்ததும் உலகத்தையே மறந்துடுவேன், நானும் என் அப்பாவும் ஒரே மாதிரி இருப்போம். இதுதான் கடவுள் எனக்கு தந்த வரம்" என்று கூறியிருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications