எஸ்வி சேகருக்கு கல்யாணமா? கையில் கட்டு கட்டாய் பணம்.. ஹேப்பியாக கொடுத்த போஸ்! ஆனால் மேட்டரே வேறயாமே!
சென்னை: நடிகர் எஸ்வி சேகர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. சீரியல் ஒன்றின் ஷூட்டிங்கின் போது அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக பின்னர் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கையில் கட்டு கட்டாக பணத்துடன் அதுவும் புத்தம் புதிய நோட்டுகளுடன் எஸ்வி சேகர் சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார் எஸ்வி சேகர்.
சின்னத்திரை, சினிமா, நாடகம் என பல ஆண்டுகளாக பிரபல நடிகராக வலம் வருபவர் எஸ்வி சேகர். அதிமுக சார்பாக எம்எல்ஏவாகவும் சட்டசபைக்கு சென்றவர். தொடர்ந்து பாஜகவிலும் பயணித்த அவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வெளியேறினார். கடந்த சில நாட்களாக திமுக மேடைகளிலும் அவர் பேச்சாளராக பங்கேற்று வருகிறார்.
முன்னதாக கடந்த 201 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார் எஸ்வி சேகர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தற்போது அந்த வழக்கு தொடர்பாக எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடகம் ஒன்றில் பெண் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் ஆபாச சைகை காட்டியதாக எஸ்வி சேகருக்கு எதிராக கண்டனம் எழுந்திருக்கிறது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பிரஸ் கிளப்பும் வலியுறுத்தி உள்ளது. இதற்கு இடையே சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் எஸ்வி சேகர். ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு பரபரப்பை கிளப்புவது எஸ்வி சேகரின் வழக்கம்.
அந்த வகையில் நேற்று திடீரென இளம் நடிகை ஒருவருடன் மணக் கோலத்தில் இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியானது. எஸ்வி சேகர் நடிகை ஷோபனா மணக் கோலத்தில் இருக்க ஷோபனாவுக்கு எஸ்வி சேகர் தாலி கட்டுவது போல புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் திடீரென வேகமாக பரவியது. பலரும் தங்கள் இஷ்டப்படி கதை கட்டிக் கொண்டிருக்க அது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் மீனாட்சி சுந்தரம் சீரியலுக்கான ப்ரோமோ என்பது அதற்குப் பிறகு தான் தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று காலையிலேயே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் எஸ்.வி சேகர். கையில் கட்டுக் கட்டாக பணத்துடன், அதுவும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தனது பெயரில் போலியாக பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் பணம் கேட்டு வருவதாகவும், யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தவே அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளாராம். மேலும் ஆண்டவன் புண்ணியத்தில் தான் பண வசதியுடன் நன்றாக இருப்பதாகவும் யாரிடமும் பணம் கேட்கும் நிலையில் இல்லை என்பதை உணர்த்தவே கையில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளை வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் எஸ்வி சேகர். என்ன இருந்தாலும் இது ரொம்ப ஓவர் என விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.
-
ஒருபுறம் மழை.. மறுபுறம் வெயில்.. 10 ஆம் தேதி வரை தமிழக வானிலை நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்!












Click it and Unblock the Notifications