இக்கட்டான சூழலில் வேல ராமமூர்த்தி.. நடிகை ராதிகா, ரம்யா கிருஷ்ணன் கூட சொன்னது.. 20 நாள் ஆகிட்டாமே
சென்னை: சமீபத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவால் ஒட்டு மொத்த திரை உலகமும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மாரிமுத்துவின் குடும்பத்தினரை போலவே அவருடைய இறப்பை அவருடைய ரசிகர்களும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இது எதிர்நீச்சல் சீரியலுக்கு விழுந்த மிகப்பெரிய அடிதான்.

ஆதி குணசேகரன் ஆக எதிர்நீச்சல் வீட்டில் உள்ள அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவருடைய அடக்குமுறைகள் ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களும் இவர் மீது கடுப்பில் இருந்தாலும் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர்.
அதனால்தான் பலருக்கும் மனதில் இடி இறங்கியது போல இவருடைய மறைவு இப்போதும் கஷ்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. வில்லனையும் இந்த அளவிற்கு ரசிகர்கள் ரசிப்பார்களா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் நடிகர் மாரிமுத்துவின் இறப்பு குறித்து அதிகமான ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த அளவிற்கு குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக தன்னுடைய நடிப்பை தத்துரூபமாக மாரிமுத்து காட்டி இருந்தார். அதனாலேயே எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது. பெண்களை எப்போதும் அடக்கித்தான் ஆள வேண்டும் என்ற ஒரு கொடூரமான கதாபாத்திரமாக சீரியல் முழுவதும் மாரிமுத்து வலம் வந்தார்.

அது மட்டுமல்லாமல் அவருடைய தனித்துவமான செருமல்கள், ஏய்... இந்தம்மா.. என்ற வார்த்தை மூலமாக இவர் உலகெங்கிலும் உள்ள சன் டிவி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். இந்த நிலையில் மாரிமுத்துவின் மறைவிற்குப் பிறகு அவர் நடித்த குணசேகரன் கேரக்டரில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்தது. அந்த நேரத்தில்தான் சமூக வலைதளத்தில் நடிகர் மாரிமுத்துவை போலவே தோற்றத்தையும் பேச்சு வழக்கத்தையும் கொண்ட நடிகர் வேல ராமமூர்த்தி பற்றி பேசப்பட்டது.
வேல ராமமூர்த்தி இந்த சீரியலில் குணசேகரனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் தங்களுடைய விருப்பங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி இனிமேல் குணசேகரனாக நடிக்க போகிறார் என்று செய்தி வைரலாகி வந்தது. இந்த நிலையில் வேலூர் ராமமூர்த்தி பெட்டியில் ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் சேனல் தரப்பில் இருந்து தன்னிடம் நடிக்க வரும்படி கேட்டார்கள் என்றும், ஆனால் இப்போது நான் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார். அது மட்டும் இல்லாமல் நான் வீட்டுக்கு சென்று 20 நாட்கள் ஆகி விட்டது. அந்த அளவிற்கு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய நண்பர்கள் பலரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி என்னை நடிக்க கொண்டிருக்கிறார்கள். அதனால் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

அதோடு நான் சினிமாக்களில் நடித்து இப்போதுதான் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் ராதிகா, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் சீரியலில் நடிக்கும்படி கேட்டு இருந்தார்கள். நான் அப்போதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டேன். எனக்கு சீரியலில் நடிக்க வேண்டும் என்பதெல்லாம் இப்போதைக்கு ஆசை இல்லை.
இப்போதைக்கு கிடைக்கும் திரைப்படங்களில் நடிப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது குணசேகரன் கேரக்டர் கிடைத்தால் என்னுடைய நடிப்பை அதில் சிறப்பாக காட்டுவேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்று இன்னும் ஒரு சில நாட்களில் உறுதியான தகவல்கள் தெரியவரும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications