நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியை ஞாபகம் இருக்கா?என்ன வேலைலாம் பண்ணி இருக்காரு பாருங்க..? இவரா இப்படி!
சென்னை: பிரபல நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிகராகவும்,குணசித்திர நடிகராகவும் அவரது ஓரு முகம் பலருக்குத் தெரியும். ஆனால் சினிமா துறையில் அவருடைய இன்னொரு முகத்தை பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ் சினிமாவில் தன்னுடைய மேனரிசத்தாலும், டயலாக் டெலிவரி செய்யும் விதத்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி, காமெடியில் இரட்டை அர்த்த வசனங்களை கலக்கி இறக்கி அடிப்பதில் முத்திரை பதித்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆவார்.

இவர் ஆரம்பத்தில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நாளடைவில் இவர் நடித்த காமெடி கதாபாத்திரங்களே இவரது பெயரை இன்றும் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்க செய்கிறது.
பொதுவாக சினிமாவில் இன்றைக்கு பல நடிகர்களும் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய மூன்று தலைமுறைக்கு மேலான பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதோடு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை மூலமாகவும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்துள்ளார்.திரையில் இவரது திறமை அறிந்திருக்கும் பலருக்கு திரைக்குப் பின்னால் இவரது திறமை குறித்த தகவல்கள் கொஞ்சம் ஆச்சரியத்தை தருகிறது .அடிப்படையில் வெண்ணிறஆடை மூர்த்தி ஒரு பத்திரிக்கையாளர் ஆவார்.
என்னதான் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இவருக்குள் இருக்கும் பத்திரிக்கையாளன் தான் இவரை ஒரு படத்திற்கு கதை ,வசனம் எழுதும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறான். வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மோகன் படத்திற்கு தான் வெண்ணிற ஆடை மூர்த்தி கதை வசனம் எழுதியுள்ளார்.
அன்னக்கிளி,ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற எவர்கிரீன் தமிழ் படங்களை இயக்கிய தேவராஜ் -மோகன் என்ற இரட்டை இயக்குனர்களில் ஒருவரான மனோ மோகன் இயக்கி மைக் மோகன் நடித்த "ருசி" என்ற படத்திற்கு தான் வெண்ணிற ஆடை மூர்த்தி கதை வசனம் எழுதியுள்ளார்.கங்கை அமரன் இசையமைத்த இந்த படம் அந்த சமயத்தில் ஓரளவு மட்டுமே வெற்றியை பெற்றது. அதனால் தான் என்னவோ வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற எழுத்தாளரை தமிழ் சினிமா நினைவில் கொள்ளவில்லை.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications