காத்திருப்பு கிடைத்தது.. குழந்தை பிறந்ததை பற்றி உருக்கமாக பதிவிட்ட திவ்யா.. அர்னவின் திடீர் பதிவு
சென்னை: கர்ப்பமாக இருந்த செவ்வந்தி சீரியல் நடிகை ஆன திவ்யா ஸ்ரீதர்க்கு குழந்தை பிறந்து இருக்கிறது.
சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கும் அவருடைய கணவர் நடிகர் அர்னவ்க்கும் இடையே இருந்த பிரச்சனையால் இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குழந்தை பிறந்த பிறகாவது அர்னவ் திவ்யாவோடு சேர்ந்து வாழலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பெண் குழந்தை பிறந்தது: சின்னத்திரையில் சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் பிரச்சனை பலருக்கும் தெரிந்ததுதான். இவர்களுடைய காதல் திருமணம் ரகசியமாக இருந்தாலும் அதற்கு அடுத்து வந்த பிரச்சனைகள் பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த திவ்யா ஸ்ரீதருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை தனக்கு ஏற்கனவே திவ்யாவிற்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று திவ்யா ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பேட்டியில் தன்னுடைய ஆசையை தெரிவித்து இருந்தார்.
உருக்கமான பதிவு:இந்த நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் மகிழ்ச்சியில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த காத்திருப்பு நீண்டது. ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. என்ன நடந்தது என்பதற்காக அல்ல. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, பலம் கண்டிப்பாக நிபந்தனை அற்றது. எண்ணில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். மேலும் விசித்திர கதைகளை போல என்றென்றும் உங்களில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் உன்னை காதலிக்கிறேன்.

அழகான தேவதை: என் அன்பே, தேவதை.. என் அழகான பெண் குழந்தை. எனது பயணம் முழுவதும் உங்கள் ஆதரவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தயவுசெய்து தொடர்ந்து வரவும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் திவ்யாவிற்கு ஆறுதலாக வாழ்த்துக்கள் கூறி அதிகமான சின்னத்திரை பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அர்னவ் வெளியிட்ட பதிவு: இந்த நிலையில் அர்னவ் மீண்டும் திவ்யாவோடு சேர்ந்து வாழ வேண்டும், குழந்தைகளுக்காக இவர்கள் இருவரும் முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும் அது அவர்கள் இருவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதுதான். இந்த நிலையில் அர்ணவ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் காரில் செல்லுவது போன்ற ஒரு வீடியோ ஒன்றை ஸ்டோரியாக போட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அப்போ குழந்தையை பார்க்கத்தான் அர்னவ் கிளம்பி போகிறாரா? என்று ஆர்வத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications