பிக்பாஸ் போறதுக்கு முன்னாடி போகலாமா வேண்டாமானு நடிகை ஸ்ருத்திகா கேட்ட நபர் யார் தெரியுமா?
திருவண்ணாமலை: இந்தி பிக்பாஸுக்கு போகணும்னு தோன்றியதுமே போகலாமா வேண்டாமா என தான் யாரிடம் கேட்டேன் என்பது குறித்து நடிகையும் குக் வித் கோமாளி வின்னர் ஸ்ருத்திகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் நடிகை ஸ்ருதிகா கூறியிருப்பதாவது: பொதுவாக எப்போதும் அண்ணாமலையாரை பார்க்க வருவேன். அவர்தான் எனக்கு எல்லாமே. குக் வித் கோமாளிக்கு முன்னாடியும் இங்கே வந்து வழிபட்டேன்.

குக் வித் கோமாளி ஃபைனல்ஸ் சுற்றின் போதும் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தேன். அதன் பிறகும் இங்கு வழிபட்டேன். பிக்பாஸ் இந்திக்கு போகலாமான்னு ஒரு யோசனை வந்த போதும் அண்ணாமலையாரிடம் உத்தரவு கேட்டேன்.
அவர் எப்போதும் என்னுடன் பேசுவார். அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் அவர்தான். பிக்பாஸ் போறதுக்கு முன்னாடி அவரிடம் ஆசி வாங்கினேன். வந்ததும் அவரிடம் ஆசி பெற்றேன். நான் கேட்டதை விட நிறைய கொடுத்திருக்கிறார்.
நான் கேட்டதை விட நிறைய செய்திருக்கிறார். இவ்வாறு கூறிய ஸ்ருத்திகா, அண்ணாமலையார் என்னுடனேயே இருக்கிறார் என சொல்லி கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தை காட்டினார்.

பிக்பாஸ் இந்தி சீசன் 18 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நடிகையும் குக் வித் கோமாளி வின்னருமான ஸ்ருத்திகா கலந்து கொண்டார்.
தமிழை போல் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த பிக்பாஸில் ஸ்ருத்திகாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிக்பாஸ் முடிய 2 வாரங்கள் இருக்கும் நிலையில் கடந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருடன் சுற்றி இருந்தவர்களே ஸ்ருத்திகாவை டார்கெட் செய்து வெளியே அனுப்பினர். ஸ்ருத்திகா பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், புகழ் உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விட்டனர்.

ஆனால் எதிர்பாராத நேரத்தில் இவரது வெளியேற்றம் நடந்தது நியாயமில்லை என ரசிகர்கள் கூறி வந்தனர். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த ஸ்ருத்திகா, வெளியேறியதும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நம்ம ஊரில் இருந்து மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தனக்கு மெசேஜ் போட்டு பலர் வாழ்த்து வருகிறார்கள். எனக்கு இவ்வளவு சப்போர்ட் கொடுத்து இருக்கீங்க... அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications