நடிகர் விஜய்யின் மகள் பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு சோக கதை இருக்கா? அம்மா ஷோபா உடைத்த ரகசியம்
சென்னை : நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில் அரசியலிலும் களம் இறங்கி இருக்கும் விஜய்க்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அம்மா விஜய்யின் மகள் பெயர் குறித்து பல விஷயங்களை பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அந்த வகையில் 90ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் 2கே ரசிகர்களையும் மனம் கவர்ந்த விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் அவருடைய 69 ஆவது திரைப்படத்தில் இணைய இருக்கிறார். திரைப்படத்திற்கான அறிவிப்புகள் பெரிய அளவில் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் கோட் திரைப்படத்தில் முக்கால்வாசி பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் மொத்த படப்பிடிப்பு முடிந்து அதற்கான ஆடியோ லான்ச் பெரிய அளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார். அதுபோல படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர்.
இவர்களோடு பிரசாந்த் பிரபுதேவா, அஸ்மல், லைலா போன்ற பல நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இதனாலேயே இந்த திரைப்படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு பக்கம் அவருடைய அரசியல் பயணத்தை எப்படி கொண்டு போகப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள் மறுபக்கத்தில் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்யின் குடும்ப பிரச்சனைகள் மற்றும் அவர் குடும்பத்தினர் பற்றிய விஷயங்களும் அடிக்கடி இணையத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்த மாதிரி விஜயின் குடும்பம் மற்றும் குழந்தைகள் மனைவி பற்றி எந்த அப்டேட்டும் இல்லாததால் விஜய்யும் அவருடைய மனைவியும் விவாகரத்து செய்யப் போகிறார்களா? என்று கேள்விகள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா தனியாக கலந்து கொண்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவருடைய குடும்பம் குறித்து அவருடைய அம்மா ஷோபா பேசியிருக்கிறார். அதில் விஜயின் தங்கை சின்ன வயதிலேயே இறந்து போனது பலருக்கும் தெரிந்திருக்கும். விஜய்க்கு தன்னுடைய தங்கை மீது தான் அதிகமான பாசம் என்றும் ஆரம்பத்தில் துரு துருவென விஜய் தன்னுடைய தங்கையின் மரணத்திற்கு பிறகு அமைதியாக மாறிவிட்டார் என்று அவருடைய சித்தியான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாண்டியன் மற்றும் அவருடைய தம்பிமார்களுக்கு அம்மாவாக நடித்த நடிகை ஷீலா கூறியிருந்தார்.
அவர் இப்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் ராதிகாவின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஜய்யின் தங்கை குறித்து ஷோபா உருகமாக பேசி இருக்கிறார். அதாவது விஜய்யின் தங்கை பெயர் "வித்யா" தானம் அவர் மூன்றரை வயது இருக்கும்போது இறந்து விட்டாராம். அவருடைய ஞாபகமாகத்தான் தன்னுடைய மகளுக்கு "திவ்யா" என்று விஜய் பெயர் வைத்துள்ளதாக ஷோபா கூறி இருக்கிறார்.
அதோடு அதோடு வித்யா மே 25ஆம் தேதி இறந்து போனாராம். ஒவ்வொரு வருடமும் அதே நாளில் ஷோபா விஜய்க்கு மெசேஜ் அனுப்பி விடுவாராம் .ஆனாலும் விஜய் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது என்று சொல்லி வருத்தப்படுவார் என்று ஷோபா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications