For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எப்போ பார்த்தாலும் ஃப்ரீ ஹேரா? முகம் தெரியலையே!

Google Oneindia Tamil News

சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் பெண்கள் அழகாகத்தான் இருக்கிறார்கள். அதில் குறை ஒன்றும் சொல்வதற்கு இல்லை. புதுப்புது பெண்களை ஹீரோயின்களாக அறிமுகப்படுத்துவதில் சானல்களுக்கு இடையில் போட்டா போட்டித்தான்.

ஆனால், வேற்று மாநிலத்து சீரியல் நடிகைகள் மட்டும் இல்லாது நம்ம தமிழ் பெண்களும் கூட ஃப்ரீஹேர் என்று எப்போதும் முடியை விரித்து போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். இதனால் சிலரின் முகம் அடையாளம் கூட தெரியாமல் போய்விடுகிறது.

படுத்து எழுந்தாலும் முடியை விரித்து போட்டுக்கிட்டுத்தான்...தூங்கப் போனாலும் முடியை விரிச்சுப் போட்டுக்கிட்டுத்தான். எழும்போதும் உதட்டில் அப்பிய லிப்ஸ்டிக்த்தான்.. அய்யோ பாவம்ன்னு வந்துருது இந்த பொண்ணுங்களை பார்க்கும்போது.

 முடியை விரிச்சு போட்டு

முடியை விரிச்சு போட்டு

ஒரு நேர்காணலில் நடிகை சச்சு கூட சொல்லி இருந்தார். இப்போது நடிக்கும் புது நடிகைகள் எப்போதும் தலையை விரிச்சு போட்டுக்கிட்டு நடித்து வருவதால், நடிகைகளின் முகம் அவ்வளவாக மனதில் பதிய மாட்டேன் என்கிறது. இவர் எந்த நடிகை, எந்த படத்தில், எந்த சீரியலில் நடித்தார் என்பது கூட நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது என்று.

thenmozhi BA serial: என்னங்க கதை விடறீங்க.. ஒருத்தருக்கு பதில் இன்னொருத்தரா?thenmozhi BA serial: என்னங்க கதை விடறீங்க.. ஒருத்தருக்கு பதில் இன்னொருத்தரா?

அழகழகா பின்னல்

அழகழகா பின்னல்

அழகழகா பின்னல் போட்டு, பூ வச்சா எவ்வளவு அழகா இருப்பார்கள் தெரியுமா இன்றைய நடிகைகள் என்றும் அவர் சொல்லி இருந்தார். அதேபோலத்தான் இப்போது சீரியலில் நடிக்கும் பெண்கள் அடுப்பு பத்த வச்சால் கூட தலை முடியை விரிச்சு போட்டுக்கிட்டு நிக்கறாங்க. தலை பின்னலிட்டால் அழகு என்ன குறைந்தா போய்விடுகிறது? ஒரு நாள் இப்படி மறுநாள் இப்படி என்று கூட கூந்தல் அலங்காரம் செய்துக்கொள்வதில்லை.

அப்பிய மேக்கப்

அப்பிய மேக்கப்

வயது வித்தியாசம் இல்லாமல் எல்லார் முகங்களிலும் அப்பிய மேக்கப் என்று பார்க்கவும் சகிக்கலை. பல ஆண்கள் சீரியலைப் பார்த்த உடன், விஜய் சேதுபதி பாணியில் ப்ப்பா எவ்ளோ மேக்கப் என்றுதான் சலித்துக் கொள்கிறார்கள். மேக்கப்பை கொஞ்சமா குறைத்துக்கொண்டால்தான் என்னவாம் என்றும் அங்கலாய்ப்பு வருகிறது.

நாளும் கிழமையும்

நாளும் கிழமையும்

நாளும் கிழமையும் தலை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு நிற்க கூடாது, அடுப்படியில் வேலை பார்க்கும்போது தலை முடியை இறுகப் பின்னி இருக்க வேண்டும். அல்லது தலை முடியை தூக்கி இறுக்க கொண்டை போட்டுக்கொள்ள வேண்டும். சுமங்கலி பெண்கள் தலைக்கு குளித்தால் கூட தலைமுடி நுனியில் முடிந்துக்கொண்டு விளக்கேற்ற வேண்டும் என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லுவார்கள்.

ஆனால், இங்கே தலை முடியை விரிச்சு போட்டுக்கிட்டு, அடுப்படியில் நிற்பதும், சாமிக்கு விளக்கு ஏற்றுவதும்.அப்படியே படுக்கைக்கு போவதும் என்று சீரியல்களில் பெண்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியலை.

English summary
The women who perform in TV serials are beautiful. There is nothing wrong with that. The rivalry between the channels in introducing the newest women as heroines. But not only serial actresses in other states, but also our Tamil women are always free hair. This leaves some people unconscious.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X