இலங்கைப் பெண்ணோடு அந்த மாதிரி உண்மைதான்..ஆனால்?திடீர் கட்சி மாறிய அர்ணவ்..பரபரப்பான குற்றச்சாட்டு
சென்னை: நடிகர் அர்ணவ் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் தனக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
அதில் இலங்கைப் பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாகி, அதை அபார்ஷன் செய்ததாக திவ்யா சொன்ன குற்றச்சாட்டுகளை அர்ணவ் மறுத்திருக்கிறார்.
இலங்கை பெண்ணை தான் காதலித்தது உண்மைதான். ஆனால் நான் கர்ப்பமாகி அபார்ஷன் செய்யவில்லை என்று அர்ணவ் கூறி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய பிரச்சனைகளை குறித்து சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
திவ்யா கர்ப்பமாக இருக்கும் தன்னை அர்ணவை அடித்து துன்புறுத்தினார் என்று கொடுத்த போலீஸ் கம்ப்ளைன்ட் காரணமாக அர்ணவ் ஜெயிலில் சில நாட்கள் இருந்து விட்டு வெளியே வந்து தற்போது மீண்டும் விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர்களுடைய குடும்பப் பிரச்சனை சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில் இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அர்ணவ் ஜெயிலில் இருக்கும் போது தான் எனக்கு அவரைப் பற்றிய பல உண்மைகள் தெரிய வந்தது என்று திவ்யா சில தினங்களுக்கு முன்பு செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் பல குற்றச்சாட்டுகளை அர்ணவ் மீது வைத்திருந்தார். அதில் இலங்கைப் பெண் ஒருவரை அர்ணவ் ஜிம்முக்கு போகும்போது சந்தித்து இருக்கிறார். பிறகு அவர்களுக்குள் காதல் வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பொண்ணோட வீட்டிலேயே அர்ணவ் தங்கி இருந்திருக்கிறார்.
அப்போ அந்த பொண்ணோட வீட்டுலையும் நான் இவங்கள தான் கல்யாணம் பண்ண போறேன் என்று நம்புற மாதிரியே பேசி இருக்கிறார். அந்த நேரத்தில் தான் அந்த பொண்ணு அர்ணவால கர்ப்பமாகிடிச்சி என்றும் பிறகு அந்த கர்ப்பத்தை கலைத்துவிட்டு அந்த பெண்ணை விட்டுவிட்டு அர்ணவ் வந்து விட்டார் என்றும் அதில் திவ்யா கூறி இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து இன்று செய்தி சேனல் ஒன்றில் பேட்டி அளித்த அர்ணவ் நான் செய்யாத குற்றங்களை எல்லாம் திவ்யா சொல்லிட்டே போறாங்க. அதுக்கு எல்லாம் ஆதாரம் இருந்தால் அதைக் கோர்ட்டில் வந்து காட்டட்டும். அவங்க சொல்றது எல்லாமே பொய், இப்படி என் மேல பழி போடுவதால் அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதோ தெரியல.
இலங்கை பெண் என்னுடைய எக்ஸ் லவ்வர் தான். அவங்களும் நானும் லவ் பண்ணினோம். ஆனா அவங்க குழந்தையை நான் கலைக்கல. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு இதுக்கு ஆதாரம் இருந்தால் காட்டட்டும். நான் திவ்யா பற்றி தப்பா சொல்ல போறது கிடையாது. அவங்க பெருசா தப்பு பண்றாங்க அதை மறைக்க தான் என்னை மாட்டி விட பாக்குறாங்க. சிலருடைய பேச்சை கேட்டுகிட்டு இந்த மாதிரி தப்பான வேலைகளை எல்லாம் திவ்யா பண்ணிட்டு இருக்காங்க.

திவ்யா பற்றிய பல ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு அதை எல்லாம் நான் கோர்ட்டில் காட்டுகிறேன். திவ்யா காட்டுற மாதிரி ஸ்கிரீன்ஷாட் என்னால் ரெடி பண்ண முடியும். ஆனால் அதை நான் செய்ய மாட்டேன். நான் கோர்ட்டில் உரிய ஆதாரத்தோடு பேச போறேன். இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் ஈஸ்வரன் தான். அவன் சொல்லித்தான் திவ்யா எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கா.
இதுக்கு மேலயும் அவங்க ஏதாவது பண்ணிட்டு இருந்தா நானும் சும்மா விடமாட்டேன். உண்மைகளை உடைக்க வேண்டி இருக்கும். அவ இனியாவது குழந்தைகளை யோசித்து நடக்கணும். நான் அவ குழந்தைகளுக்காக தான் அவளை பற்றிய உண்மைகளை எல்லாம் வெளியே பேசாம இருக்கேன் ஆனா எப்பவும் இப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications