Pandian Stores Serial: அப்பாடா...நாள் முடியறதுக்குள்ள வாழ்த்து சொல்லியாச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிஜமா, மாயையா என்று புரியாமல் இது முல்லை இல்லை என்று அலட்சியமாக இருந்த கதிர், ஒரு வழியா ரியலைஸ் பண்ணிட்டான். கோபத்தில் முல்லை திரும்பிப் படுத்து இருந்தாலும், .இந்தா இங்கே பாருன்னு சொல்லி, கை குலுக்கி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டான்.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல தவியாய் தவித்து வாழ்த்து சொன்ன காட்சிதான் மேற்கண்டது. முல்லை மகிழ்ச்சியில் கதிரை பார்க்கிறாள்.

கதிர் மணியைப் பார்க்கிறான்.. அப்பாடா... நாள் முடியறதுக்குள்ள பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு என்று சொல்கிறான். அடடா...நமக்கு வாழ்த்து சொல்லணும்னு நினைச்சுக்கிட்டுத்தான் இருந்து இருக்கான் போல என்று சந்தோஷப்படுகிறாள்.

 4 மணியிலிருந்து 6 மணி வரை

4 மணியிலிருந்து 6 மணி வரை

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தினமும் திங்கள் முதல் சனி வரை என்று 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணி வரை நான்கு நான்கு எபிசோடுகளாக ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரு வாரம் முழுக்க ஒரு விஷயத்தை வைத்து ஓட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு. இப்போது அடுத்தடுத்து எபிசோடுகள் என்று ஒரு மாதத்து கதையை ஒரே வாரத்தில் பல எபிசோடுகளாக ஒளிபரப்பி வருகிறது.

 முல்லைக்கு பிறந்தநாளாம்

முல்லைக்கு பிறந்தநாளாம்

முல்லைக்கு பிறந்த நாள் என்று கேள்விப்பட்ட கதிர், அவளுக்கு வாழ்த்து சொல்லி பரிசும் தர வேண்டும் என்று பரிசு பெட்டியோடு, அவள் வீட்டுக்கு போகிறான். ஆனால் முல்லை கதிர் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். இது தெரியாத கதிர், அவசரப்பட்டு முல்லைக்கு தன்னை பிடிக்கவில்லை. அதனாலதான் அவள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்று வெறுத்து போகிறான்.

 ஜீன்ஸ் போட்ட பசங்க

ஜீன்ஸ் போட்ட பசங்க

கடைக்கு வந்து கோவத்தில் பரிசு பெட்டியை விட்டெறிந்துவிட்டு, கல்லாவில் உட்கார்ந்து இருக்கும் தம்பி கண்ணனிடம், கடையில் வந்து உட்காராதடா.. பொண்ணுங்களுக்கு உன்னை பிடிக்காது. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு, கலர் கலரா டி ஷார்ட் போட்டுக்கிட்டு இருக்கும் பசங்களைத்தான் பிடிக்கும் என்று கத்துகிறான். இந்த அண்ணனுக்கு என்னாச்சு என்று குழம்பி தவிக்கிறான் கண்ணன்.

 எப்படியோ சொல்லியாச்சு

எப்படியோ சொல்லியாச்சு

அங்கு இங்கு சுத்திட்டு வந்தாலும், முல்லையின் பிம்பம் அவனுக்கு அங்கங்கு தெரிகிறது. நிஜம் என்று நினைத்து ஏமாந்து விரக்தியாக இருக்கிறான். அப்போதுதான் வீட்டுக்கு வரும் அவன், கட்டிலில் உட்கார்ந்து இருக்கும் முல்லையும் வெறும் மாயைதான் என்று கண்டுக் கொள்ளாமல் இருக்கிறான். கோவத்தின் உச்சிக்கே போன முல்லை, தலையணையை தூக்கிப்போட்டுவிட்டு, அழுதுக்கொண்டே படுத்து விடுகிறாள்.

 அடடா நிஜமா

அடடா நிஜமா

அடடா நிஜமாவே வந்துட்டாளான்னு எழுந்து அவளை இங்கே பாரு.. இந்தா என்றெல்லாம் கூப்பிடுகிறான். கடைசியாக பெட்டில் தட்ட அவள் எழுந்து உட்கார்ந்து விடுகிறாள். மெதுவாக கையை இவன் நீட்ட, அவளும் கையை நீட்ட...அதை இறுகப் பற்றிக்கொண்டு, குலுக்கி பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறான். மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற முல்லை ஆசையாய் அவன் முகத்தைப் பார்க்க. இவன் கடிகாரத்தைப் பார்த்து...அப்பாடா...நாள் முடியறதுக்குள்ள சொல்லிட்டேன் என்று சொல்கிறான் கதிர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+