அய்யனார் துணை அப்டேட்: வீட்டுக்காக நிலா போட்ட பிளான் சக்சஸ்.. குறுக்க வந்த நடேசன், கடைசியில் நடந்த சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai Serial Episode Update) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 16ம் தேதிக்கான எபிசோடில், வீட்டை எப்படியாவது மீண்டும் மீட்க வேண்டும் என்பதற்காக நிலா சோழன் மற்றும் பாண்டியனுடன் சேர்ந்து ஒரு புது பிளான் போட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் (Ayyanar Thunai serial today episode) நடேசன் வீட்டில் கேஸ் நடந்து கொண்டிருப்பதால் எந்த வேலைகளையும் செய்யக் கூடாது என்று நடேசனின் அண்ணன் மிரட்டி இருந்தார், அதை பொருட்படுத்தாமல் வேலை பார்த்ததால் போலீசை கூப்பிட்டு வந்து வீட்டுக்கு சீல் வைக்கிறார். இதனால் நடேசன் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறி ஓட்டலில் ரூம் எடுத்து தங்குகிறது. இதனால் வீட்டை மீட்க என்ன செய்யலாம் என்று எல்லோரும் பிளான் போடுகின்றனர்.

நிலா போட்ட பிளான்
வீட்டை மீட்க ஒரே வழி உயிலை கண்டுபிடிப்பதுதான் என்று சோழனும் நிலாவும் பேசிக்கொள்கிறார்கள். நடேசன் முன்பே அப்பா எழுதிய உயிலில் எந்த சொத்து யாருக்கு என்று தெளிவாக சொல்லியிருந்தாலும், அந்த உயில் இப்போ எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை என்று சொன்னதும், அது பெரியப்பா கிட்ட இருக்கலாம் என்று நிலா சந்தேகப்படுகிறாள். நேராக கேட்டால் சொல்ல மாட்டார் என்பதால் வேறு திட்டம் போட முடிவு செய்கிறார்கள்.
நடேசன் செய்த சம்பவம்
அதே நேரத்தில் நடேசன் வீட்டுக்குச் சென்று சீலை உடைக்க முயற்சிக்கிறார். ஆனால் சேரன் தடுத்து நிறுத்துகிறார். அப்போது சேரனின் அத்தையும் வந்து நடேசனுடன் வாக்குவாதம் செய்கிறார். இதனால் உயிலை பற்றி தெரிந்து கொள்ள நிலா பல்லவனையும் பாண்டியனையும் கூப்பிட்டு ஒரு பிளான் போடுகிறார்.
ஏமாந்த பெரியப்பா
அதாவது முகமூடி அணிந்து பெரியப்பாவை கடத்தச் சொல்கிறார். அவர்களும் பெரியப்பாவை ஒரு இடத்துக்கு கொண்டு சென்று அடித்து மிரட்டி, சொத்து பத்திரம் எங்கே என்று கேட்கிறார்கள். அதற்கு பெரியப்பா அந்த பத்திரம் நடேசன் கிட்ட தான் இருக்கிறது என்று சொல்லுகிறார். திட்டம் வெற்றியாகிவிட்டதால், நிலாவும் சோழனும் பின்னர் வந்து பெரியப்பாவை காப்பாற்றுகிறார்கள்.
இந்த பிளான் தெரியாத பெரியப்பா என்னை காப்பாத்திட்டீங்க என்று நன்றி சொல்லுகிறார். இதனால் உயில் நடேசனிடமே இருக்கிறது என்பது உறுதியாகிறது. அதன்பிறகு நிலாவும் சோழனும் வீட்டுக்குள் இருக்கும் பத்திரத்தை எடுக்க கிளம்புகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications