அய்யனார் துணை அப்டேட்: வீட்டுக்காக நிலா போட்ட பிளான் சக்சஸ்.. குறுக்க வந்த நடேசன், கடைசியில் நடந்த சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai Serial Episode Update) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 16ம் தேதிக்கான எபிசோடில், வீட்டை எப்படியாவது மீண்டும் மீட்க வேண்டும் என்பதற்காக நிலா சோழன் மற்றும் பாண்டியனுடன் சேர்ந்து ஒரு புது பிளான் போட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் (Ayyanar Thunai serial today episode) நடேசன் வீட்டில் கேஸ் நடந்து கொண்டிருப்பதால் எந்த வேலைகளையும் செய்யக் கூடாது என்று நடேசனின் அண்ணன் மிரட்டி இருந்தார், அதை பொருட்படுத்தாமல் வேலை பார்த்ததால் போலீசை கூப்பிட்டு வந்து வீட்டுக்கு சீல் வைக்கிறார். இதனால் நடேசன் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறி ஓட்டலில் ரூம் எடுத்து தங்குகிறது. இதனால் வீட்டை மீட்க என்ன செய்யலாம் என்று எல்லோரும் பிளான் போடுகின்றனர்.

நிலா போட்ட பிளான்
வீட்டை மீட்க ஒரே வழி உயிலை கண்டுபிடிப்பதுதான் என்று சோழனும் நிலாவும் பேசிக்கொள்கிறார்கள். நடேசன் முன்பே அப்பா எழுதிய உயிலில் எந்த சொத்து யாருக்கு என்று தெளிவாக சொல்லியிருந்தாலும், அந்த உயில் இப்போ எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை என்று சொன்னதும், அது பெரியப்பா கிட்ட இருக்கலாம் என்று நிலா சந்தேகப்படுகிறாள். நேராக கேட்டால் சொல்ல மாட்டார் என்பதால் வேறு திட்டம் போட முடிவு செய்கிறார்கள்.
நடேசன் செய்த சம்பவம்
அதே நேரத்தில் நடேசன் வீட்டுக்குச் சென்று சீலை உடைக்க முயற்சிக்கிறார். ஆனால் சேரன் தடுத்து நிறுத்துகிறார். அப்போது சேரனின் அத்தையும் வந்து நடேசனுடன் வாக்குவாதம் செய்கிறார். இதனால் உயிலை பற்றி தெரிந்து கொள்ள நிலா பல்லவனையும் பாண்டியனையும் கூப்பிட்டு ஒரு பிளான் போடுகிறார்.
ஏமாந்த பெரியப்பா
அதாவது முகமூடி அணிந்து பெரியப்பாவை கடத்தச் சொல்கிறார். அவர்களும் பெரியப்பாவை ஒரு இடத்துக்கு கொண்டு சென்று அடித்து மிரட்டி, சொத்து பத்திரம் எங்கே என்று கேட்கிறார்கள். அதற்கு பெரியப்பா அந்த பத்திரம் நடேசன் கிட்ட தான் இருக்கிறது என்று சொல்லுகிறார். திட்டம் வெற்றியாகிவிட்டதால், நிலாவும் சோழனும் பின்னர் வந்து பெரியப்பாவை காப்பாற்றுகிறார்கள்.
இந்த பிளான் தெரியாத பெரியப்பா என்னை காப்பாத்திட்டீங்க என்று நன்றி சொல்லுகிறார். இதனால் உயில் நடேசனிடமே இருக்கிறது என்பது உறுதியாகிறது. அதன்பிறகு நிலாவும் சோழனும் வீட்டுக்குள் இருக்கும் பத்திரத்தை எடுக்க கிளம்புகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அழகே அழகு சீரியல் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications