பாண்டியன் ஸ்டோரை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீசன் 2.. இனி கதை இது தானா? பிரபலம் வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கதை சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி இரண்டாவது பாகம் என்று இந்த சீரியலில் நடிக்கும் பிரபலம் ஒருவர் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே இந்த சீரியலின் கதை போகும் விதத்தைப் பார்த்து சீக்கிரமாக முடித்துக் கொண்டால் நன்றி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இனி சீசன் 2வில் கதை எதுவாக தான் இருக்கும் என்றும் இந்த சீரியலின் நடிகர் வெளியிட்ட புகைப்படத்தால் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல வருடங்களாக ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் சமீபத்தில் டிஆர்பியில் சரிவடைய தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தில் இந்த சீரியல் தான் இருந்தது. கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.
குடும்ப தலைவியாக இருக்கும் பாக்யா தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி பல இடங்களில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்ததை பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர். பாக்கியாவின் வெற்றியை தங்களுடைய வெற்றியாகவே பலரும் கொண்டிருந்ததாலயே இந்த சீரியல் டிஆர்பியில் முக்கிய இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்த கள்ளக்காதல் தொடங்கி வருகிறது.
ஏற்கனவே அமிர்தாவின் முதல் கணவர் மரணமடைந்தது போன்று காட்சிகள் வைத்திருந்தனர். ஆனால் இப்போது மீண்டும் அவர் உயிரோடு வந்தது போன்று கதையை மாற்றி இருக்கின்றனர். அதுபோல செழியனின் வாழ்க்கையில் மாலினி என்ற கேரக்டர் வந்து பூகம்பத்தை ஏற்படுத்துகிறார். இப்படியாக இந்த சீரியல் கதை பயணம் மாறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் காரணமாக கடந்த வாரத்தில் கூட டிஆர்பி யில் இந்த சீரியல் இரண்டாவது இடத்தில் வந்துவிட்டது. மொத்தமாக டாப் 10 சீரியல்களில் இந்த சீரியல் 6.79 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி பார்ட் 2 என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஒரு பொம்மை அதாவது கணவன் சேர் ஒன்றில் சாய்ந்து இருப்பது போன்றும், அங்கு அவருடைய மனைவி பாயில் கணவரின் பக்கத்தில் புத்தகம் படித்தது போன்றும் இருக்கிறது. இந்த நிலையில் அப்போ சீக்கிரமாக இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா? ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போதுதான் முடிவுக்கு வந்து இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இனி பாக்கியலட்சுமி சீரியலும் இரண்டாவது பாகம் தொடங்க இருக்கிறதா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் இதில் சேரில் இருப்பது கோபி என்றால் பக்கத்தில் இருப்பது பாக்கியாவா அல்லது ராதிகாவா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications