Baakiyalakshmi: இன்று தான் செம சம்பவம்.. பாக்கியா குடும்பத்தில் நடந்த நல்ல விஷயம்! முடிவு சூப்பர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோடில், எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. கோபிக்கு இனியா ஆறுதல் சொல்வதிலிருந்து தொடங்கி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாக்கியா தனது ரெஸ்டாரன்ட்களைத் திரும்பப் பெறுவது, அமிர்தா கர்ப்பமாக இருப்பது, மற்றும் ஆகாஷ் கலெக்டராகி இருப்பது போன்ற மகிழ்ச்சியான செய்திகள் இந்த எபிசோடில் இடம்பெற்றன.

கோபிக்கு ஆறுதல் சொன்ன இனியா
கோபியிடம் இனியா, "சாரி டாடி, என்னை மன்னிச்சுடுங்க. என்னாலதான் உங்களுக்கு இப்படி ஆகிடுச்சு," என்று வருத்தத்துடன் சொல்கிறாள். அதற்கு கோபி, "உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைமா. நான் தான் தப்பு பண்ணிட்டேன். என்னால தான் உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு," என்று சொல்லி, அவளுக்கு ஆறுதல் கூறுகிறார்.
பாக்கியாவின் வெற்றிகரமான மறுபிரவேசம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாக்கியா தனது இரண்டு ரெஸ்டாரன்ட்களையும் திரும்பப் பெற்று, பூஜை செய்து வேலைகளை மீண்டும் தொடங்குகிறார். இனியா, "இப்போதுதான் அம்மா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ இழந்த இரண்டு ரெஸ்டாரன்ட்டும் உனக்கு வந்துடுச்சு," என்று கூற, பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார். "இப்போது எனக்கு ஓடிக்கொண்டிருப்பதில்தான் சந்தோஷம்," என்று அவர் கூறுகிறார். பின்னர் ஊழியர்களுடன் இணைந்து மெனுவை மாற்றுவது குறித்துப் பேசுகிறார்.
அமிர்தா கர்ப்பம்
ஈஸ்வரி, எழில், கோபி மற்றும் இனியா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும்போது, அமிர்தா கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாகிறது. அமிர்தா வாந்தி எடுத்துவிட்டு வருவதைப் பார்த்த ஈஸ்வரி, "மூணு மாசம்தானே ஆகுது அத்தை," என்று சொல்ல, அமிர்தா கர்ப்பமாக இருக்கிறார் என்பது உறுதியாகிறது. "ஆம்பளப் புள்ளதான் பிறக்கும்," என்று ஈஸ்வரி கூற, எழில் "எந்தக் குழந்தையா இருந்தாலும் என்ன பாட்டி," என்று சொல்கிறார்.
ஆகாஷ் கலெக்டர் ஆனார்
ஜெனி சமைத்த உணவை அனைவரும் பயத்துடன் சாப்பிடும்போது, வீட்டிற்கு வரும் பாக்கியா, "ஆகாஷ் காஞ்சிபுரத்துக்கு சப் கலெக்டரா அப்பாயிண்ட்மெண்ட் ஆகி இருக்கான்," என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார். இதைக் கேட்டு குடும்பத்தினர் சந்தோஷமடைகின்றனர். இனியாவிடம், "என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?" என்று கேட்க, "எனக்கு முன்னாடியே தெரியும்மா. அவன் எனக்கு டெக்ஸ்ட் பண்ணிட்டான்," என்று அவள் கூறுகிறாள்.
ஈஸ்வரி, "நம்ம ஆகாஷுக்கு இனியாவைக் கல்யாணம் பண்ணி வச்சிடலாமா?" என்று கேட்க, "அதெல்லாம் சரிப்பட்டு வராது," என்று பாக்கியா சொல்கிறார். "இப்போதைக்கு அவங்க ஃப்ரண்ட்ஸா தான் பழகிட்டு இருக்காங்க. அவங்க அவங்களுக்கு அந்த நேரத்துல அவங்க வாழ்க்கை துணையத் தேர்ந்தெடுத்துப்பாங்க," என்று கூறி, இப்போதைக்கு இந்த விஷயத்தைப் பேச வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.
மறுநாள் காலையில், செல்வி மற்றும் ஆகாஷ் இனிப்புடன் பாக்கியா வீட்டிற்கு வர, குடும்பத்தினர் என்ன பேசுகிறார்கள் என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications