கோபி மற்றும் ஈஸ்வரியை கதறவிட்ட பாக்யா, இப்பவாவது இந்த முடிவை எடுத்தீங்களே.. ராதிகா கொடுத்த சப்போர்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யாவிற்கு ஆர்டர் கிடைக்காததால் அதற்கு கோபி மற்றும் ஈஸ்வரி திட்டி அசிங்கப்படுத்த அதற்கு பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

அதே நேரத்தில் பாக்யாவுக்கு உதவி செய்வதற்காக ராதிகாவும் முயற்சி செய்கிறார். இந்த நிலையில் இனியா பாக்கியா மீது கோபத்தில் இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வீட்டில் கோபி இனியாவை ஷாப்பிங் கூட்டிட்டு போனதற்காக ராதிகாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு பாக்யா வர ஹாலில் இனியா கோபத்தில் இருக்கிறார். அதற்கு பாக்கியா இனியாவிடம் சமாதானம் படுத்த போகிறார். அப்போது என்னை நீ மறந்துட்ட தானே ஈவினிங் ஃபங்ஷன் ஒன்னுக்கு போக ஷாப்பிங் போகணும்னு சொன்னேனே இப்போ எல்லாம் உனக்கு என் நினைவே இல்ல என்று இனியா திட்டுகிறார்.
அதனால் கோபமான எழில் இனியாவை திட்டுகிறார். அம்மா என்ன மாதிரி மனநிலையில் இருக்கிறார்கள் என்று உனக்கு ஏதாவது தெரியுதா? என்று திட்டிக் கொண்டிருக்க எல்லோரும் சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்து விடுகின்றனர். அப்போது அமிர்தா கேன்டீன் ஆர்டர் பற்றி விசாரிக்கிறார். அதற்கு கான்ட்ராக்ட் குழுக்கள் முறையில் வேறொருத்தவங்களுக்கு கொடுத்துட்டாங்க என்று பாக்கியா சொல்ல அதைக் கேட்டது ஈஸ்வரி அப்போ கொடுத்த பணம் எல்லாம் போச்சா என்று கோபப்படுகிறார்.
அதற்கு பாக்யா பணத்தை கொஞ்சம் நாளில் கொடுத்துடுவாங்க என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி அப்படியெல்லாம் கொடுக்க மாட்டாங்க, நீ எதுவும் பண்ண வேண்டாம். இனி நீ வீட்டிலேயே இரு. நீ வேலை பாக்குறேன்னு சொல்லி அலைந்தது போதும். வீட்டு செலவை பார்க்க மாமாவோட பென்ஷன் பணம் இருக்கு. அதுபோக செழியன், எழில் இருக்காங்க அவங்க வீட்ட பாத்துக்குவாங்க என்று சொல்ல ராதிகா தானும் தன்னுடைய பங்கை கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அதனால் கோபமான பாக்கியா யாரும் பணம் கொடுக்க வேண்டாம் நானே வீட்டை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கேன்ல்ல அதுபடியே பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா தனியாக யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கோபி பாக்யாவை நக்கல் அடிக்கிறார்.
அப்போது பாக்கியா நான் இப்படியே இருந்திட மாட்டேன் சீக்கிரமா இதிலிருந்து மீண்டு வருவேன் என்று கோபியிடம் சவால் விட்டுவிட்டு அங்கிருந்து போகிறார். அதைத்தொடர்ந்து பாக்கியா செல்வியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வி எனக்கு இந்த ஆர்டர் நமக்கே வந்து சேரும்னு தோணுது என்று பாக்யா சொல்ல நீ நினைச்ச மாதிரியே கண்டிப்பா நடக்கும் அக்கா என்று செல்வியும் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.
பிறகு இரவு கோபி தூங்குவதற்காக ரூமிற்கு வந்து ராதிகாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரியும் அங்கு வர ராதிகா வழக்கம் போல கீழே படுத்து கொள்கிறார். அப்போது கட்டிலில் கோபி பக்கத்தில் ஈஸ்வரி படுத்துக்கொண்டு பாக்கியா செய்வது பிழையாய் இருக்கு. பாக்கியா முன்ன மாதிரி இல்ல. எல்லாமே தப்பா தான் பண்ணிக்கிட்டு இருக்கா. அவளால எல்லாருக்கும் பிரச்சனை வந்துகிட்டு இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டு ராதிகா கோபம் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications