நடிக்க 10,000.. அட்ஜஸ்ட் பண்ணா 40,000.. நடிகை ஜீவிதா செய்த சம்பவம்.. பயில்வான் சொன்ன வார்த்தை
சென்னை: நடிகை ஜீவிதா தனக்கு நடந்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அது குறித்து பயில்வான் ரங்கநாதன் தற்போது பேசி இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை ஜீவிதாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பும் பிறகு அட்ஜஸ்மென்ட் பிரச்சனையை ஏற்பட்டதும் அதற்கு ஜீவிதா என்ன செய்தார் என்பது பற்றி அதில் பயில்வான் பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சமீபத்தில் நடிப்பு துறையில் மட்டுமல்லாமல் பெண்களுக்கு பல துறைகளிலும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆண்களுக்கு கூட இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பலர் அதைப் பற்றி வெளியே சொல்வதற்கு தயங்கிக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் ஒரு சில நடிகர்கள் நடிகைகள் தங்களுக்கு நடந்த அவலங்கள் குறித்து தைரியமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஜீவிதாவும். இவர் ஏற்கனவே சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பார். இந்த நிலையில் தான் இவருக்கு ஒரு சில சினிமாவிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார்.

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தியின் அக்காக்களில் ஒருவராக ஜீவிதாவும் நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது ஜீவிதா தன்னிடம் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் சொன்னார்கள். நானும் சரி என்று சொன்னேன். அப்போது என்னிடம் ₹40,000 சம்பளம் என்று பேசினார்கள். ஆனால் அதற்கு நீ அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என சொன்னார்கள்.
இதற்கு நான் கண்டிப்பா என்னால் அதெல்லாம் செய்ய முடியாது என்று சொன்னதால் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளம் என்று சொன்னார்கள். ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டும் தான் நாற்பதாயிரம் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதற்கு நான் எனக்கு பத்தாயிரம் ரூபாயே போதும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து 40000 எனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்டேன் என்று ஜீவிதா சொல்லி இருக்கிறார்.

அது குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேட்டியில் இதை பற்றி பேசியிருக்கிறார். ஒரு சில நடிகைகள் எங்களுக்கு அட்ஜஸ்மென்ட் செய்து தான் வாழ வேண்டும் என்று இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள். அதில் போல தங்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்தும் தைரியமாக பேசுகிறார்கள் என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காரணம் பல நடிகைகள் பற்றி அந்தரங்க விஷயங்களையும் பரபரப்பாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் இப்படி எல்லாம் கூட ஒரு பெண்ணுக்கு ஆதரவாக பேசுவாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications