Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bakkiyalakshmi: இனியா திருமணம் முடிந்ததும் ராதிகா சொன்ன விஷயம்! கண்கலங்கிய பாக்யா! கோபி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 7, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோடில், இனியா மற்றும் ஆகாஷின் திருமணம், மகிழ்ச்சியையும், சில நெகிழ்ச்சியான தருணங்களையும் தாங்கி நிறைவடைந்தது. இந்தத் திருமணம், குடும்பத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

Baakiyalakshmi Serial vijay TV

மகிழ்ச்சியில் இணைந்த குடும்பத்தினர்

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், சங்கீத் மற்றும் ரிசெப்ஷன் முடிந்த பிறகு, குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். "இன்னும் கொஞ்சம் பேரை கூப்பிட்டு இருக்கலாம்," என்று சிலர் சொல்ல, "அவர்கள் சிம்பிளாக நடந்தால் போதும் என்று சொன்னதால், இப்படி நடந்தது," என பாக்கியா சொல்கிறார். கோபி, "நம்ம வீட்டில் ஒரு ஃபங்ஷன் என்றால் டான்ஸ் ஆடுவோம், இப்போது எதுவும் காணோம்," என்று சொல்ல, எழில், செழியன், ஜெனி, அமிர்தா, இனியா, ஆகாஷ் மற்றும் பாக்கியா என அனைவரும் சேர்ந்து நடனம் ஆடினர். இதைப் பார்த்த ஈஸ்வரியும், கோபியும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ராதிகா - கோபியின் உரையாடல்

மறுநாள் காலையில், திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ராதிகா தனது மகள் மயூவுடன் வருகிறார். பாக்யா அவர்களை வரவேற்று விசாரிக்க, ராதிகாவும் கோபியும் பேசிக்கொள்கின்றனர். கோபி, "உன் லைப் எப்படி போய்கிட்டு இருக்கு? வேறு யாராவது வாழ்க்கையில் வந்திருக்காங்களா," என்று கேட்க, ராதிகா, " ஏன் கேட்கிறீங்க, நான் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தான் வாழ்கிறேன்," என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.

பின்னர், ராதிகா, இனியாவைச் சந்தித்து நலம் விசாரித்தபின், அமிர்தாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார். அப்போது, அங்கு வந்த செல்வியைப் பார்த்து, "வாங்க கலெக்டர் அம்மா," என்று ராதிகா அழைக்கிறார். "நீங்களும் ஒரு முக்கிய காரணம்தான்," என்று ராதிகா சொல்ல, "எல்லா பசங்களுக்கும் உங்களைப் போன்ற ஒரு அம்மா கிடைக்க வேண்டும்," என்று ராதிகா செல்வியைப் பாராட்ட, அவர் நெகிழ்ந்து போகிறார்.

ராமமூர்த்தியின் ஆசிர்வாதம்

ஐயர் திருமண ஏற்பாடுகளைச் செய்ய, இனியா - ஆகாஷ் திருமணம் நல்லபடியாக நடந்து முடிகிறது. ஆகாஷ், இனியாவின் கழுத்தில் தாலி கட்டி, திருமணம் முடிந்ததும், ஈஸ்வரிக்கு ஆறுதலாக, மறைந்த ராமமூர்த்தி தோன்றி, "இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பார்கள்," என்று ஆசிர்வாதம் செய்கிறார். அதைக் கண்ட ஈஸ்வரி, சந்தோஷத்துடன் புன்னகைக்கிறார்.

பிறகு, புதுமணத் தம்பதிகள், பெரியோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர். இந்தத் திருமணம், பாக்கியலட்சுமி குடும்பத்தில் ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இனியா - ஆகாஷ் திருமணம் இனிதே நிறைவடைந்தது.

கலங்கிய பாக்யா

பிறகு எல்லாரையும் பாக்யா மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அங்கு செல்வியின் புருஷன் நல்ல நேரம் போயிட்டு இருக்கு இனியாவை எங்களுடைய வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொல்கிறார். அதை கேட்ட உடனே பாக்கியா கவலைப்படுகிறார். பிறகு செல்வி இத்தனை நாள் இனியா உங்களுடைய பிள்ளை இனிமேல் இனியா என்னுடைய பிள்ளை என்று பாக்கியாவிடம் சொல்கிறார். இதனால் எல்லோரும் இனியாவை சந்தோஷமாக செல்வி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+