அம்மாவை பற்றி உருக்கமாக பேசிய பாலா... இழப்பின் உச்சத்தில் பேசிய வார்த்தை.. ஆதரவு கூறும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய அம்மாவை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் நான்காவது சீசனில் தன்னுடைய அம்மா, அப்பாவை பற்றி தவறாக பேசிய அதே பாலாஜியா இப்போ இப்படி பேசுவது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

ஏற்கனவே பரிச்சயம் தான்
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியிருக்கும் பாலாஜி முருகதாஸ் ஏற்கனவே பிக்பாஸ் நான்காவது சீசனில் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் தான். இவர் தன்னுடைய கம்பீரமான அழகால் மட்டுமல்லாமல் கேரக்டரிலும் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்து இருக்கிறார். அதனால் தான் பிக்பாஸ் நான்காவது சீசனின் ரன்னர் ஆக இவர் வெற்றி பெற்றிருந்தார். தற்போது எப்படியும் வின்னராக ஆகிவிட வேண்டும் என்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பார்த்து பார்த்து விளையாடி வருகிறார்.

கலங்க வைத்த கதை சொல்லும் டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதைசொல்லும் டாஸ்க் ஒவ்வொரு சீசனிலும் நடந்து வரும் முக்கியமான சம்பிரதாயமாக இருந்து வருகிறது. அதுபோலத்தான் நான்காவது சீசனிலும் நடந்தது. அப்போது பாலாஜி முருகதாஸ் தன்னுடைய குடும்பத்தை பற்றி ரசிகர்களுக்கு கூறியிருந்தார். அப்போது குழந்தையாக இருக்கும்போது பெற்றோர் குடித்து விட்டு இவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதனாலே அதிகமாக யாரிடமும் இவர் பாசம் காட்டுவதில்லை என்றும் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறி இருந்தார். ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் பேசியதை பார்த்து ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

தாமரையிடம் கொட்டிய மனக்குமுறல்
பாலாஜி முருகதாஸ் யாரிடமும் அதிகமாக பாசத்தைக் காட்டுவது இல்லை. அவரிடம் யாராவது காட்டினால் கூட இது நடிப்பா?? என்று நேரடியாக கேட்டு விடுவார். அத்தகைய குணம் உள்ளவர் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை இடம் மட்டும் அதிகமாக பழகி வருகிறார். தன்னுடைய பெர்சனல் விஷயங்களை கூட தாமரையிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்படித்தான் நேற்று எபிசோட்டில் தன்னுடைய தாய்க்கு எதுவும் செய்ய முடியாததை நினைத்து வருந்துவதாக கூறியிருந்தார். தான் சிறு வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதால் அம்மாவிடம் அதிகமாக நெருக்கமாக இருந்தது இல்லை. அவருக்கு என்று நான் எதையும் செய்ததே இல்லை என்று கூறியிருந்தார்.

வெறுப்பின் உச்சத்தில் பாலாஜி
இவர் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய மனது மனதுக்கு பிடித்த மாதிரி தான் வாழ்ந்து வந்தாராம். அப்போது ஒரு நாள் ஜிம்மில் இருக்கும் போது தான் இவருக்கு போன் வந்திருக்கிறது. இவருடைய அம்மா இறந்து விட்டார் என்று, அந்த செய்தியை கேட்டு அவர் அப்படியே உறைந்து போய் விட்டாராம். உடனே கிளம்பி வர முடியாத சூழ்நிலையில் இவர் மாட்டிக் கொண்டாராம். தற்போது இவர் சம்பாதித்து கையில் பணம் இருந்தாலும் அவருடைய அம்மாவுககு எதுவும் வாங்கி கொடுக்க முடியவில்லை, தன்னுடைய தந்தையும் என்னுடன் இல்லை நான் யாருக்காக சம்பாதிக்கிறேன் என்றே தெரியவில்லை பல நேரங்களில் வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது என்று தன்னுடைய சோகத்தை தாமரையிடம் கூறியிருக்கிறார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications