பாக்யராஜூக்கு மாடுலேஷுடன் பேசவே வராது.. அபார திறமை.. டிட்டோ அப்படியே எம்ஜிஆர்.. போட்டுடைத்த பிரபலம்
சென்னை: 'முந்தானை முடிச்சு படத்தில் எனக்கு உண்மையிலேயே வயதாகிவிட்டது என்று நினைத்து, யாருமே அப்போ பொண்ணு தரல' என்று மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், முந்தானை முடிச்சு படத்தின் வெற்றி குறித்தும் சிலாகித்து பேசியிருக்கிறார்.
King 24X7 யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்திருந்த பேட்டியில், ""முந்தானை முடிச்சு" படத்தில் சில்க் ஸ்மிதாவை, ஒரு பாடலுக்கு ஆட வைக்கலாம் என்று ஏவிஎம் சரவணன் சொன்னார். ஆனால், என் ஹீரோயினே அதுபோல ஆடுவாங்க என்று சொல்லிய பாக்யராஜ், "கண்ணை தொறக்கணும் சாமி" பாடலில் தீபாவை ஆட வைத்தார்.. சில்க் இல்லாமலேயே அந்த பாட்டை சக்சஸ் செய்ய வைத்தார்.

அதேபோல, அவசர போலீஸ் படத்தில் சில்க் ஸ்மிதா தான் வேண்டும் என்று சொல்லி, தன்னுடைய மனைவியாக அதில் நடிக்க வைத்திருந்தார். நான் முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க காரணமே பிரவீனாதான்.. பாக்யராஜ் - பிரவீனா திருமணம் முடிந்துதான் முந்தானை முடிச்சு படம் எடுக்கப்பட்டது. அப்போது பேச்சிலராக நான் லாட்ஜில் தங்கியிருந்தேன்.
பிரவீனா: பிரவீனா எனக்கு போன் செய்து சொன்னபிறகுதான், ஏவிஎம்மில் போய் பார்த்தேன்.. அதன்பிறகுதான், முருங்கைக்காய் வைக்கிற சீன் எனக்கு தரப்பட்டது. இந்த முருங்கைக்காய் வைக்கும் சீனுக்கு பாக்யராஜின் நண்பர்கள், தேனாம்பேட்டை நாடகர்கள் எல்லாம் போட்டி போட்டார்கள்.. ஆனால் எனக்கு அந்த சீனை ஒதுக்கியதற்கு காரணமே பாக்யராஜ் மற்றும் பிரவீனாதான்.
அந்த நேரத்தில் வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஒரு கதையை பாக்யராஜ் காப்பி செய்துவிட்டதாக கேஸ் நடந்தது. அப்போது அதுசம்பந்தமாக நான் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகி, சக்ஸஸ் ஆனது. அந்த வழக்கும் வெற்றி பெற்றது.. அதனடிப்படையில் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிரவினா யாரையுமே எளிதில் பார்க்க மாட்டார். ஆனால், ஒரு குடும்ப நண்பர் போல என்னிடம் பழகினார். வீட்டில் மாடிக்கு அழைத்து சென்று, ஆந்திராவிலிருந்து வந்திருந்த மாம்பழங்களை தருவார்.
நம்பியார் சாமி: முதலில் நான் தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியார் கேரக்டரில் நடிப்பதாக இருந்தது.. ஆனால், அந்த கேரக்டர் ரொம்ப ஹெவியானது.. நான் அதில் நடித்திருந்தால் செட் ஆகியிருக்க மாட்டேன்.. நம்பியார் சாமி செய்யவும்தான் அது சரியாக இருந்தது.
முந்தானை முடிச்சு படத்தில் எனக்கு வயதான வைத்தியர் வேடம்.. தலையில் விக் வைத்து, 65 வயது கிழவனாக மாற்றி விட்டார்கள்..
23 வயதான எனக்கு, 65 வயது கிழவன் கெட்டப்பில், நிஜமான கிராமத்து வைத்தியர் போலவே இருந்தேன். எனக்கு உண்மையிலேயே வயதாகிவிட்டது என்று நினைத்து, எனக்கு யாருமே அப்போ பொண்ணு தரல. முந்தானை முடிச்சு படம் 100 வது நாள், விழாவில் பாக்யராஜ் காலில் விழுந்தேன். காரணம், முரட்டு ஆத்மாவான எனக்குள்ளும், காமெடி இருந்ததை கண்டுபிடித்தவர் பாக்யராஜ்
கலைவாரிசு: அப்போது, தன்னுடைய கலைவாரிசு என்று பாக்யராஜை அறிவித்தார் எம்ஜிஆர்.. பாக்யராஜை எதுக்காக கலைவாரிசு என்று எம்ஜிஆர் அறிவிக்க வேண்டும்? என்று எனக்குள் யோசனை எழுந்தது. அதை நான் ஆராய்ந்து பார்த்தேன்.. எம்ஜிஆருக்கு நடிக்க தெரியாது.. காரணம், தன்னுடைய எல்லா படங்களிலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்துவிடுவார்.. அழும் காட்சிகளில் நடிக்க மாட்டார்.
நல்லா சண்டை போடுவார். 7 நாள் ஷூட் பண்ணுவார்.. ஆனால் ஒரே நாள் டூப் போட்டு, அந்த சண்டை காட்சியை மேட்ச் செய்துவிடுவார் எம்ஜிஆர்.. இதே டெக்னிக்தான் பாக்யராஜிடம் இருக்கும்.. டூப் போடுவதில் அருமையாக மேட்ச் செய்வார். அதேபோல, எம்ஜிஆர் படங்களில் பாட்டு நல்லா இருக்கும்.. ஹீரோயின்கள் நல்லா நடிச்சிருப்பாங்க.. காமெடிகள் நல்லா இருக்கும். இதேதான் பாக்யராஜ் படங்களிலும் இருக்கும். அதனால்தான், பாக்யராஜை கலைவாரிசு என்று எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார்.
திரைக்கதை: ஆனால், இப்போதுகூட மாடுலேஷனுடன் பாக்யராஜூக்கு பேச தெரியாது. ஆனால், அதை யாருமே கண்டுக்கல.. எப்படி ரஜினிகாந்த் பேசற தமிழை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களோ, அதுபோல அதுபோல மாடுலேஷன் இல்லாமல் பேசும் பாக்யராஜையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.. தமிழ் சினிமா வரலாற்றை எழுதும்போது, திரைக்கதை என்றாலே, அது எங்கள் பாக்யராஜ் சார்தான்" என்று நெகிழ்ந்து கூறினார் பயில்வான் ரங்கநாதன்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications