கருத்த செல்லம் கண்ணம்மாவுக்கு 20 ஆயிரம் ரூபாய்ல புடவையா... யாருடி அவன்?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் தாரத்துக்கு பிறந்த கண்ணம்மா ரொம்ப கருப்பு. ரெண்டாம் தாரத்துக்கு பிறந்த அஞ்சலி ரொம்ப அழகு. ஒரு வீட்டுல இப்படி பொண்ணுங்க இருந்தால் சித்தி கொடுமை எப்படி இருக்கும் பாருங்க.
சில சமயம் இதுல அதிசயமும் நடக்கும்...பல பேருக்கு கருப்பு மட்டுமே தெரிஞ்ச நிலையில், உள்ள இருக்கும் வெள்ளை மனசால ஈர்க்கப்பட்டு அதிசயம் நடப்பது உண்டு. அதுக்கெல்லாம் பெரிய மனசு இருக்கணும்.
எல்லாருமே வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிஞ்சுக்கிட்டா வெற்றி, தோல்வி ஒண்ணும் செய்யாது. வாழ்க்கையில பெரிய எதிர்பார்ப்பும் இருக்காது. வீணான மனசு கஷ்டமும் வராது.
அஞ்சலி அழகா இருக்கான்னு, அகிலன் அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான். ஏழையானாலும், அழகா இருக்காளே... அகிலனுக்கும் பிடிச்சு இருக்கேன்னு கல்யாண ஏற்பாடுகளை செய்யறாங்க..அவங்க அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி இருக்கணும்னு அழகான வீடு அஞ்சலி குடும்பத்துக்கு பரிசா தர்றாங்க.
அஞ்சலிக்கு அகிலனை பிடிக்கலை, அவனின் அண்ணன் டாக்டர் பாரதியை பிடிச்சு போகுது. பல ,முறை பாரதியை லவ் பன்றேன்னு சொல்லியும், பாரதி, தம்பிக்கு பிடிச்ச பொண்ணாச்சே.. வீணா கல்யாணத்தை நிறுத்திட கூடாது. அஞ்சலி திருந்திருவான்னு கோபத்தை வெளிக்காட்டாமல் அஞ்சலியை சகிச்சுக்கறான்.
கண்ணம்மாவை பாரதிக்கு பிடிச்சு போகுது.. ஜவுளி எடுக்கப் போறாங்க கடைக்கு. அப்போ ஒரு புடவையை எடுத்து தன் மேல் போட்டு அழகு பார்க்கறா கண்ணம்மா. புடவை விலையை கேட்கையில் 20 ஆயிரம்னு சொன்னதும் புடவையை வச்சுட்டு வந்துடறா.
கண்ணாம்மாவின் அப்பாவும் விலையை கேட்டுட்டு வச்சுட்டு வந்துடறார்.இதை பாரதி கவனிச்சுக்கிட்டே இருக்கான். மறுநாள் கூரியரில் கண்ணம்மா ஆசைப்பட்ட புடவை அவள் பேருக்கே வருது.
அக்கா குண்டு பல்பு அனுப்பறதுக்கு கூட ஆளில்லாத இவளுக்கு 20 ஆயிரம் ரூபாயில் புடவை யாருக்கா எடுத்து குடுத்திருப்பான்னு கணபதி தூபம் போடுகிறான். கண்ணம்மா சத்தியமா எனக்கு தெரியாது சித்தி.. நான் புடவையை பார்த்துட்டு வச்சுட்டு வந்துட்டேன்னு சொல்லி அழறா.
அப்பாகிட்டயும், அப்பா என்னை தப்பா நினைக்காதீங்க அப்பா... எனக்கு இது பத்தி ஒண்ணும் தெரியாது.. நானும் யார்கிட்டயும் புடவை கேட்கலைன்னு அழறா.
அப்பா கண்ணாம்மாவை சமாதானப்படுத்தி அழைச்சுக்கிட்டு போனதும், அஞ்சலி, இவளுக்கும் ஒருத்தன் 20 ஆயிரம் ரூபாயில் புடவை எடுத்து குடுத்திருக்கானே.. அவன் எந்த அளவுக்கு மடையனா இருப்பான்னு சொல்லிட்டு சிரிக்கறா.
என்னாது.. ஜீன்ஸ்..டி ஷர்ட்டை நீ போட்டுவிட போறியா..பயங்கரவாதமால்ல இருக்கு...
சந்தேகம் ஒரு வியாதி.. அது எப்பவும் எந்த நேரத்துலயும் வரவே கூடாதுன்னு தெரிஞ்சுக்க இது நல்ல காட்சி.