பிக்பாஸ் 2: சேரே உடையும் அளவுக்கு தலைவர் பதவிக்கு அடித்துக் கொள்ளும் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் வீட்டின் தலைவர் ஆவது தொடர்பாக போட்டியாளர்கள் இடையே பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் பதவிக்கு போட்டியாளர்கள் பலரும் போட்டியிடுகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. முதல் வாரம் டாஸ்க் ஒன்றின் மூலம் ஜனனி தலைவியானார். அதனைத் தொடர்ந்து அடுத்தவாரம் வித்தியாசமான முறையில் நித்யா தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், மூன்றாவது வாரத்தின் தலைவரை இன்று போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

பதவிக்கு போட்டி ;
இதற்காக வித்தியாசமான முறையில் பிக்பாஸ் போட்டியொன்றை அறிவிக்கிறார். அதன்படி கன்ப்பெக்ஷன் ரூமில் உள்ள நாற்காலியில் முதலில் யார் உட்கார்கிறார்களோ அவர்களே இந்தவாரத் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க முடியும்.

புதிய ப்ரோமோ:
இதற்கான அறிவுப்பு வந்த உடனே போட்டியாளர் முண்டியடித்துக்கொண்டு கன்ப்பெக்ஷன் ரூமுக்குள் ஓடினர். அனைவரும் ஒரே நேரத்தில் நாற்காலியில் அமர முயன்றதால், அந்த நாற்காலி உடையும் நிலை ஏற்பட்டது. இந்தக் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் உள்ளது.

தலைவர் ஆசை :
ஏற்கனவே, ஜனனி, நித்யா ஆகியோர் தலைவிகளாக இருந்து விட்டதால், அவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. மற்றவர்கள் தான் எப்படியும் இந்த வாரத் தலைவர் ஆகிவிட வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

எலிமினேசன்:
பிக்பாஸ் வீட்டின் தலைவராகி விட்டால், மற்றவர்களை அதிகாரம் செய்ய முடிகிறதோ இல்லையோ, ஆனால், நிச்சயம் தலைவரை எலிமினேசனுக்கு நாமினேட் செய்ய இயலாது. எஜமானி, உதவியாளர் டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே டேனி மற்றும் ரித்விகாவை இந்தவாரம் யாரும் எலிமினேசனுக்கு நாமினேட் செய்ய இயலாது. எனவே, மற்றவர்களுக்குத் தான் இந்த பயம் அதிகமாக உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications