‘மஹத் அய்யா ரொம்ப சவுண்ட் பார்ட்டியாக இருக்கிறார்’.. டிவிட்டரில் ஸ்ரீபிரியா விமர்சனம்
பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் பற்றி டிவிட்டரில் ஸ்ரீபிரியா விமர்சித்து பதிவுகள் வெளியிட்டுள்ளார்.
சென்னை: பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களைப் பற்றி நடிகையும், கமல் கட்சியின் முக்கிய பிரமுகருமான ஸ்ரீபிரியா விமர்சித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட திருடன் - போலீஸ் டாஸ்க் முடிந்து, பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது.
இதில் நாட்டாமையாக ஜனனி இருக்க, பொதுமக்கள் அனைவரும் மாறி, மாறி போலீசை குறை கூறுகின்றனர். இப்படியாக நிகழ்ச்சியின் விறுவிறுப்பைக் கூட்ட பிக் பாஸும் எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறார்.
விமர்சனம்:
இந்நிலையில், பிரபல நடிகையும், கமல் கட்சியில் முக்கிய அங்கம் வகித்து வருபவருமான ஸ்ரீபிரியா பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் மனநிலை குறித்து டிவிட்டரில் விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார். ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக சின்னச் சின்னதாக அப்பதிவுகள் உள்ளன.
மும்தாஜின் கோபம்:
அதில், ‘இந்த நிகழ்ச்சி மூலம் நித்யாவுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து விட்டது போல் நினைக்கிறேன். ஆரம்பத்தில் இருந்த மும்தாஜ் தற்போது தன் அமைதியை இழந்து காணப்படுகிறார். முதலில் ஆக்ரோஷமாக இருந்த வைஷ்ணவி தற்போது அமைதியாகி வருகிறார்.
|
ரித்விகா:
மஹத் அய்யா ரொம்ப சவுண்ட் பார்ட்டியாக இருக்கிறார். . செண்ட்ராயன் ரொம்ப அப்பாவியாக இருக்கிறாரு. ரித்விகாவுக்கு சாமி ஆடவே தெரியவில்லை, மிகவும் சாப்டாக சாமியாடுகிறார்' என ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக அவர் விமர்சித்துள்ளார்.
கமலுடன் பங்கேற்பு:
முதல் சீசனின் போதும் இதேபோல் போட்டியாளர்களை அதிகமாக விமர்சித்தவர்களின் ஸ்ரீபிரியாவும் ஒருவர். நிகழ்ச்சியின் இடையே ஒரு வாரம் கமலுடன் பிக் பாஸ் மேடையில் தோன்றி இது குறித்து அவர் விளக்கமாகவும் உரையாடியது நினைவு கூரத்தக்கது.