விசித்ராவோட சண்டை வந்ததே இதனால்தான்.. அந்த வார்த்தை பேசினாங்களே? தினேஷ் உடைத்த ரகசியம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த தினேஷ் அந்த நிகழ்ச்சியில் தன்னோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்த விசித்ரா குறித்து வெளியே வந்ததும் முதல் முறையாக பேட்டிகளில் பேசியிருக்கிறார். அதோடு தனக்கு விசித்ராவோடு எதற்காக சண்டை வந்தது என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
அதோடு விசித்ரா தன்னை மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த ஒரு சிலருடைய பர்சனல் வாழ்க்கை குறித்தும் அங்கே தாக்கி பேசியிருந்தார். அதனால் தான் தனக்கு கோபம் ஏற்பட்டது. ஆனால் நான் எந்த இடத்திலும் விசித்ராவிடம் சென்று நானாக சண்டை போட்டது கிடையாது. அவராக என்னிடம் எதையாவது பேசும்போது நான் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறேன் என்று தினேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் என்னவெல்லாம் பேசினார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து முடிவு வரைக்கும் உள்ளே வன்மம் நிறைந்ததாக தான் இருந்தது. உள்ளே போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து கொண்டு ஒரு அணியினரை மற்றொரு அணியினர் தாக்கிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு சில போட்டியாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தொடக்கிய சண்டை கடைசி நாள் வரைக்கும் நீடித்தது.
அந்த வகையில் தினேஷ் மற்றும் விசித்திராவிற்கு இடையே நடந்த சண்டை பார்க்கும் ரசிகர்களையே கடுப்பாக்க வைத்திருந்தது. தினேஷ் எதற்கெடுத்தாலும் விசித்திரா தான் என்று சொல்வதும் விசித்திரா எதற்கெடுத்தாலும் தினேஷ் என்று சொல்வதும் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் தினேஷ் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் எனக்கு விசித்திராவிருக்கும் கருத்து வேறுபாடு தொடங்கியது, நான் தலைவராக இருந்த முதல் வாரத்தில் தான்.












Click it and Unblock the Notifications