பிக் பாஸ் 7: டைட்டில் ஜெயிக்க பிளான் போட்ட விஷ்ணு, பூர்ணிமா.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 28ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த சீசனில் கடைசி நாள் வரைக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணு மற்றும் பூர்ணிமா போடும் பிளான் தெரிய வந்திருக்கிறது.

அதே நேரத்தில் எப்போதும் மாயாவுடன் இருக்கும் பூர்ணிமா இப்போது மாயா பற்றிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் எதிர்பாராத பல மாற்றங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் இப்படி தான் என்று யாரையும் கணிக்க முடியாததாக இருக்கிறது. அதுபோல இந்த சீசனில் டைட்டில் வின்னர் இவர் தான் என்று யாரையும் யோசிக்கவும் முடியவில்லை என்பது பல ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
ஏற்கனவே பிரதீப்புடைய வெளியேற்றும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதுபோல கதை சொல்லும் டாஸ்க்கில் விசித்திரா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தெலுங்கு நடிகர் ஒருவர் மூலமாக பட்ட வேதனை குறித்து பேசி இருந்ததும் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இரண்டு போட்டியாளர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போய் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்திருக்கின்றனர்.
அவர்கள் வெளியே விளையாட்டு எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களிடம் விவாதித்து இருக்கின்றனர். இதனால் உள்ளே விளையாடிக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் பூர்ணிமா ரொம்பவே குழம்பி போய் இருக்கிறார். ஏற்கனவே வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் தன்னையே டார்கெட் செய்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று அதிகமான நேரங்களில் பூர்ணிமா குற்றசாட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு போய் மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர்களும் தன்னுடைய விளையாட்டு குறித்து பேசியது பூர்ணிமாவை மேலும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் இன்று இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பூர்ணிமா மற்றும் விஷ்ணு இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது விஷ்ணு பூர்ணிமாவிடம் நீ படம் பார்த்து இருக்கியா? மாஸ் ஆன ஒரு வில்லன் தான் அந்த படத்தையே தூக்கி நிப்பாட்டுவான். ஹீரோவை விட அதிக ஹைப் வில்லனுக்கு இருந்தா மட்டும் தான் அந்த படம் ஹிட் ஆகும். அதனால நான் ஓப்பனா இப்ப கூட சொல்லுறேன், என்னை நீங்க வில்லனா கூட பார்த்துக்கோங்க கடைசி வரைக்கும் நான் இருப்பேன் என்று நீ நினைச்சுக்கோ என்று ஆறுதல் கூறுகிறார்.
அதற்கு பூர்ணிமா நான் இப்ப வரைக்கும் நான் நானாக தான் இருக்கேன். இந்த ஷோக்காக யார் கூடயும் சேர்ந்து நான் எதுவும் பண்ணல என்று விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து கிச்சனில் தனியாக பூர்ணிமா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இப்போ நானும் விஷ்ணுவும் பேசிக் கொண்டிருந்தோம் அதை பார்க்கிறாங்க அதனால இனி விஷ்ணு என்ன கண்ட்ரோல் பண்றான்னு சொல்லுவாங்க என்று புலம்பி கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications