பணப்பெட்டி போயிடுச்சு.. ஆனால்? கமல் கொடுத்த எச்சரிக்கை.. கலங்கும் போட்டியாளர்கள்.. பூர்ணிமா எஸ்கேப்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 6ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இன்று சனிக்கிழமை எபிசோடு என்பதால் வழக்கம்போல தாமதமாகவே மதியத்துக்கு மேலே ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வார இறுதி நாட்கள் என்பதால் கமல்ஹாசன் இந்த வார நிகழ்ச்சிகளுக்கு பஞ்சாயத்து செய்வதற்காக வந்திருக்கிறார். அதிலும் பணப்பெட்டி வெளியே போன பிறகும் உள்ளே இருக்கும் பகையைப் பற்றி இந்த வாரம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பூர்ணிமா பணப்பெட்டியை தூக்கி சரியான முடிவு எடுத்திருந்தாலும் இன்று கமல்ஹாசன் இடம் இருந்து தப்பித்து இருக்கிறார். இல்லை என்றால் இந்த வாரம் ரோஸ்ட் பூர்ணிமாவிற்கு தான் கிடைத்திருக்கும் என்று நெட்டிசன்கள் இந்த ப்ரோமோவிற்கு கலாய்த்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் .

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒருசில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. எட்டு போட்டியாளர்கள் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில் நேற்று பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சம் ரூபாயை தூக்கி கொண்டு பூர்ணிமா வெளியேறி இருந்தார்.
அதை தொடர்ந்து உள்ள ஏழு போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில விஷ்ணு டிக்கெட் டூ போனால் டாஸ்க்கில் ஜெயித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து மீதமுள்ள ஆறு போட்டியாளர்களும் எலிமினேஷனக்கான நாமினேஷனில் இருக்கின்றனர். இதனால் இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் விஜய் வர்மா மற்றும் மாயா இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸில் இருந்து கடைசியில் விசித்திரா மற்றும் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது எவ்வளவு உண்மை தன்மை உள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை எபிசோடு என்பதால் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் கமல்ஹாசன் என்ன பேச இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு அவர் பணப்பெட்டியை பற்றி பேசி இருக்கிறார்.
அதில் பணப்பெட்டி புறப்பட்டு விட்டது, வீட்டில் இருக்கிற எல்லாருமே நான் பெட்டியை எடுத்துட்டு போயிட்டா கப்பு எல்லாம் செஞ்சு வச்சுருக்காங்க... ஐம்பது லட்சம் ரூபாய் இருக்கு, அதை யாரு எடுப்பார்கள் அப்படிங்கிற ஒரு கவலையில இருக்காங்க. ஆனா வெற்றியாளர் ஒருவர் தான் என்பது பற்றி அவர்கள் மறந்து விட்டார்களா? பணப்பெட்டி கிளம்பி போயிருந்தாலும் வீட்டிலே தங்கி இருந்த அந்தப் பகை அப்படியே இருக்கு. அது ஏன் என்பது பற்றி இன்று விசாரிப்போம் என்று சொல்லி இருக்கிறார்.

அதே நேரத்தில் மாயா என்னதான் தப்பு செஞ்சாலும் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் பூர்ணிமாவை வைத்துதான் கிளாஸ் எடுத்துக் கொண்டிருப்பார். ஆனால் இந்த வாரம் பூர்ணிமா ஸ்மார்ட் ஆக அங்கிருந்து தப்பித்து விட்டார். இதனால் இந்த வாரம் கமல்ஹாசன் யாரை வைத்து கிளாஸ் எடுக்க போகிறார் என்று பார்க்க வேண்டும் என்றும் ப்ரோமோவில் ரசிகர்கள் கமெண்ட்களை கொட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications