பிக் பாஸ் பற்றி பகீர் கிளப்பிய வனிதா.. பத்தாயிரம் கமெண்ட் இருக்காமே... கமல்ஹாசனுக்கு அடுத்த சிக்கல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் வனிதா இந்த சீசனில் பி ஆர் மார்க்கெட்டிங் அதிகமாக இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
அதோடு பி ஆர் மார்க்கெட்டிங் மூலமாகத்தான் இந்த முறை ஓட்டிங் லிஸ்டில் மாற்றம் இருக்கிறது. அதை விஜய் டிவி சரியாக கவனிக்க வேண்டும் என்றும் வனிதா கூறி இருக்கிறார்.
ஏற்கனவே கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் வனிதாவும் புதிய குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் நிலையில் இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹைலைட்டாக சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காக ஒரு கூட்டமே காத்திருக்கும். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி என பழமொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் மக்களின் மத்தியில் எளிமையாக பிரபலமாகிவிடலாம் என்பதற்காகவும், சினிமாவுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காகவும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் தற்போது பேட்டி ஒன்றில் பிக் பாஸ் பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் சில போட்டியாளர்கள் காசு கொடுத்து பி ஆர் வைத்து ஓட்டிங் லிஸ்ட்டை மாற்றுகிறார்கள். அதை விஜய் டிவி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதோடு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியாக ரிவ்யூ செய்து வருவதால் எனக்கு ஒரு பத்தாயிரம் மெசேஜ் அனுப்பி இருப்பார்கள்.
வழக்கமா எனக்கு இந்த மாதிரி மெசேஜ் வந்துட்டு தான் இருக்கும். ஆனால் இந்த சீசன்ல ரொம்ப ஜாஸ்தியா வருது. ஏன்னா இதுல ஜோவிகாவும் கலந்து கொண்டதுதான். இதுல பல ரசிகர்கள் என்ன கேக்குறாங்கன்னா அக்கா பி ஆர் பன்றோம் மார்க்கெட்டிங் பண்றோம் என்று பிக் பாஸ் வோட்டிங் லிஸ்ட்டை சேஞ்ச் பண்றாங்க, அத பத்தி கட்டாயம் பேசுங்க என்று சொல்றாங்க.
அவங்க சொன்னது போல பிக்பாஸ் வோட்டிங் எல்லாமே இப்ப உண்மையா இல்ல மக்கள் விருப்பத்துக்கு மாறா தான் இருக்கிறதா என்று தான் பலர் கேள்வி எழுப்புறாங்க. எவ்வளவோ காசு கொடுத்து இப்படி பண்ணுறாங்க. இந்த வாரத்தில் நடந்தது டோமெக்ஸ் கேம். இந்த கேம்மை பார்த்தா மக்கள் இம்ப்ரஸ் ஆகி இந்த அளவுக்கா அதிகமாக ஓட்டு போட போறாங்க? இப்ப இருக்கிற ஓட்டிங் லிஸ்ட் ல ஒருத்தங்க மட்டும் ரொம்ப டிஃபரென்ஸ்ல இருக்காங்க.
ஆனா அது பிஆர் கம்பெனி செய்த வேலை. இதுக்காக பயங்கரமா வேலை செய்றாங்க. விஜய் டிவி இந்த விஷயத்தில் ரொம்ப கவனமா இருந்து இதை ஆராய்ந்து மக்களின் உண்மையான விருப்பத்தை தெரிந்து கொண்டு செயல்படனும். ஏற்கனவே இந்த சீசனில் வெளியாகிய அவுட்டிங் லிஸ்ட் எல்லாமே நாம பார்த்துட்டு தான் இருக்கோம்.
அது ஒண்ணுமே ஜெனியூ கிடையாது. பிஆர் இருக்கு தானே காசு கொடுத்து அவங்க போட்டுட்டு போயிருவாங்க, ஆனால் ரசிகர்களுடைய உண்மையான அன்பு ஒட்டிங்கில் போய் சேராது. இப்ப இந்த சோசியல் மீடியாவில் நடக்கிற பிரச்சனைகளை பி ஆர் மார்க்கெட் தான் தீர்மானிக்கிறது.
வரவர இந்த ஷோவும் அப்படியே ஆகிட்டு. இந்த ஷோவை மட்டும் பிடிச்சவங்களை பார்த்து ரசிக்கலாம். ஷோ முடிஞ்சதும் பிடிக்காதவர்கள் வின் பண்ணுனா கிழிக்கலாம், அவ்வளவுதான். அப்புறம் அர்ச்சனா நல்லா செய்து இருந்தாங்க ஈஸ்வரி கேரக்டர் உண்மையாவே அவங்களுக்கு ஏத்தது போல தான் இருந்தது.
அர்ச்சனா வந்ததும் மாயா கூட இருந்தவங்கள பிரிக்கத்தான் பார்த்தாங்க. அப்படி என்னதான் அர்ச்சனாவுக்கு கோபம் என்று தெரியவில்லை. வெளியே இருந்து வெறும் கமெண்ட்ஸ் மட்டும் பாத்துட்டு இவங்க வைல்ட் கார்டா உள்ளே போனதும் இப்படி பண்ணுறாங்க. இப்ப அர்ச்சனாவுக்கும் வெளியில பேட் கமெண்ட்ஸ் வருது.
அதனால அவங்க கெட்டவங்களா ஆகிடுவாங்களா என்று வனிதா கேள்வி கேட்டு இருக்கிறார் .அதுபோல வனிதா தன்னுடைய ரிவியூவில் அர்ச்சனாவுக்கு அதிகமான ஓட்டுகள் வந்ததை தான் பி ஆர் டீம் வைத்து அர்ச்சனா இவ்வளவு லீடிங்கில் ஓட்டு வாங்கி இருக்கிறார் என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications