BB 8 tamil finaleவில் நடந்த மாற்றம்.. சௌந்தர்யாவிற்கு சேதுபதி கொடுத்த மிகப்பெரிய பரிசு! மாறிய லிஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19ஆம் தேதி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 24 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் மட்டும் பைனலுக்கு வந்திருக்கின்றனர். அதில் யார் வின்னராக போகிறார்கள்? யார் ரன்னராக போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

நேற்று நடந்த சூட்டிங்கில் பவித்ரா மற்றும் ரயான் இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதில் பவித்ரா நான்காவது இடத்திலும், ரயான் ஐந்தாவது இடத்திலும் தேர்வாகி இருக்கிறார்கள். அதுபோல முதல் மூன்று இடங்களுக்கான சூட்டிங் இன்று நடைபெற்றிருக்கிறது.
அப்போது மூன்றாவது இடத்தில் விஜே விஷால் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வின்னராக முத்துக்குமரனும், ரன்னராக சௌந்தர்யாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. நேற்று வெளியான தகவலின் படி விஜே விஷால்தான் ரன்னர் என்று கூறப்பட்டது. இது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வந்தது.
சௌந்தர்யாவிற்கு ஆரம்பத்தில் இருந்து அதிகமான ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். ஆனால் அது பி ஆர் சப்போர்ட் என்று ஒரு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். ஆனாலும் வி.ஜே விஷால் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டு நியாயமானதாக இல்லை, இரண்டு பெண்களை சார்ந்து அவர் விளையாட்டை விளையாடினர், இரண்டு பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டார் அவர்களை காதல் செய்வது போல ஏமாற்றிக் கொண்டிருந்தார் என்றெல்லாம் அவர் மீது அதிகமான குற்றச்சாட்டுகளும் ட்ரோல்களும் வந்தது.
ஆனாலும் அவர் இரண்டாவது இடத்தில் தேர்வாகி இருப்பதாக கூறப்பட்டபோது அதிகமானார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் படி முத்துக்குமரன் டைட்டில் வின்னராகவும், சௌந்தர்யா ரன்னராகவும் தேர்வாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications