பிக் பாஸை திட்டிட்டு நள்ளிரவில் வெளியேறிய நந்தினி! முக்கிய காரணமே விஜே பார்வதி தான்! நடந்த சம்பவம் இது!
சென்னை: விஜய் டி.வி-யின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிச்சதுல இருந்து பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை! வழக்கமா, ஒரு நாள் முழுக்க எடுத்து ஒரு மணி நேரத்துக்குக் கன்டென்ட் தேடும் பிக் பாஸ் டீமுக்கு, இந்த சீசன்ல அந்த வேலை இல்லை! ஏன்னா, உள்ளே இருக்கிற போட்டியாளர்கள், "கன்டென்ட் கொடுத்தாதான் வீட்டில் நிலைக்க முடியும்"னு வெறியோட ஆடுறாங்க! ஆனா, இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், தொகுப்பாளினி நந்தினி திடீரென வெளியேறியது பலருக்கும் ஷாக்கிங்காக அமைந்திருக்கு!

உச்சகட்ட கோபம்
முதல் ரெண்டு நாள் அமைதியா இருந்த நந்தினி, கடைசி ரெண்டு நாள்ல, தான் ஒரு 'உணர்ச்சிப் பிழம்பு'ன்னு நிரூபிச்சுட்டார். சக போட்டியாளர்கள் அவர் சிரிப்பதைப் பற்றிக் கிண்டல் செஞ்சது, அப்புறம் சபரி இறந்தால் எப்படி இருக்கும்னு செஞ்ச டிராமா எல்லாம் அவருக்குப் பிடிக்காமல் போனது. வெளியேறுவதற்கு முந்தைய நாள் இரவே, நந்தினி தனது கோபத்தைக் கட்டுப்பாடில்லாமல் காட்டி, சக போட்டியாளர்களை வார்த்தைகளால் பயங்கரமாகத் திட்டினார்!
அழுகையில் இருந்த அவரைச் சமாதானப்படுத்தப் போனவர்கள் மீதும் கோபம் காட்டினார். கடைசியில், போட்டியாளர் கனி மட்டும்தான் தனியாகப் போய் அவரைச் சமாதானப்படுத்தித் தூங்க வைக்க முடிந்தது.
பிக் பாஸையே விமர்சித்த ஆக்ஷன்
வெளியேறும் நாளிலும், நந்தினியின் கோபம் குறையவில்லை. போட்டியாளர்களைத் திட்டியது மட்டுமில்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சியையே அவர் மோசமாக விமர்சித்தார்!. "என்னோட உண்மையான அன்புக்கு இங்கு மதிப்பு இல்லை. இங்கு யாரும் உண்மையாக இல்லை. அன்பை எல்லாம் சந்தேகப்படுறாங்க. நான் நல்லா இருக்கணும்னு நினைச்சா, எல்லாரும் என்னை நாமினேட் பண்ணுங்க! நான் வெளியேறுகிறேன். இப்போ விட்டால் கூடப் போதும், நான் விஜய் சேதுபதியிடம் சொல்லிவிட்டு கிளம்பி விடுவேன்!" என்று கொதித்துப் பேசினார்.
கோபத்தின் உச்சத்தில் சக போட்டியாளர்களை மோசமான வார்த்தைகளால் அவர் திட்டியதையும் நேற்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இதைப் பார்த்த பார்வதி, இவரை ஆசுவாசப்படுத்த முயற்சித்ததோடு, மனநலன் தெரபிக்கு போகுமாறு 'ஃப்ரீ அட்வைஸ்'ஸையும் கொடுத்தார்!.
நந்தினி அனைவரையும் வசப்பாடி முடித்ததும் அவரை ஆசுவாசப்படுத்திய துஷார் நீங்க நல்ல போட்டியாளர் அக்கா, இந்த நிகழ்ச்சிக்கு நீங்க கண்டிப்பா இருந்து ஆகணும் என்று அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த விஜே பார்வதி நந்தினியை ஏத்தி விடுவது போலவே பேசிக் கொண்டிருந்தார். இதனால் துஷார் கோபமாக கத்தி அவரும் ஒருவகையில் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். பிறகு அங்கிருந்து அனைவரும் துஷாரை கூட்டிக்கொண்டு சென்றனர். துஷார் சென்றதும் பார்வதி தன்னுடைய சித்து வேலையை தொடங்கிவிட்டார்.
நந்தினி இடம் நீ கனி பற்றி சொன்னியே என்ன விஷயம் என்று கேட்க அதற்கு நந்தினி கனி அக்கா என்னுடைய டிரஸ்ஸை விமர்சித்தாங்க என்று சொன்னதும், நீயும் அவங்ககிட்ட சிக்கிட்டியா அவங்க எல்லாம் இப்படித்தான் என்று மேலும் ஏத்தி விட இதனால் மீண்டும் கோபமான நந்தினி அங்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். நந்தினி வெளியேறியதற்கு ஒருவகையில் பார்வதி தான் முக்கிய காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கன்ஃபக்ஷன் அறை போட்ட ஆக்ஷன் கட்
இவ்வளவு கன்டென்ட் கொடுத்துக் கண்ணீர் சிந்தின நந்தினியை, பிக் பாஸ் கன்ஃபக்ஷன் அறைக்கு அழைத்து, என்ன பிரச்சனைன்னு கேட்டார். நிகழ்ச்சி மீதான தனது அதிருப்தியை நந்தினி வெளிப்படுத்த, பிக் பாஸ் கூலாக ஒரு முடிவெடுத்தார்!. பிக் பாஸ் சொன்னது: "உங்களுக்கு இடது புறத்தில் ஒரு கதவு உள்ளது. அதில் இருந்து நீங்கள் வெளியேறலாம்!". நந்தினியும் தயக்கமில்லாமல் வெளியேறிவிட்டார். அடடா! முதல் வாரமே இவ்வளவு கன்டென்ட் கொடுத்த ஒரு புள்ளியை, பிக் பாஸ் இப்படி ஒரு வார்த்தையில 'ஆக்ஷன் கட்' பண்ணிட்டாரேன்னு ரசிகர்கள் குழப்பத்தில் இருக்காங்க!
தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நன்கு அறியப்பட்ட நந்தினி வெளியேறியது, பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், சிலர் "நந்தினி வெளியேற்றப்பட்டது நல்லது" என்றும், சிலர் "இது ஆட்டத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது" என்றும் விவாதித்து வருகிறார்கள். மொத்தத்தில், பிக் பாஸ் வீட்டுக்குள்ளே உண்மையைத் தேடிப் போன நந்தினிக்கு, 'வெளியேறும் வழி'தான் உண்மையாகக் கிடைத்தது போல!
---
நந்தினி வெளியேறிய இந்தத் துணிச்சலான முடிவு, பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு பாடமாக அமையுமா? அல்லது அவர்கள் இன்னும் அதிகமா டிராமா போட ஆரம்பிப்பார்களா?












Click it and Unblock the Notifications