சினேகனை அதட்டிய கன்னிகா... வெளியே வந்ததும் சந்தோஷமான செய்தி இருக்கு.. ஆனந்த கண்ணீரில் சினேகன்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் சினேகனுக்கு அவருடைய மனைவி அறிவுரை கூறியுள்ளார்.
கன்னிகா கூறிய வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் யாரைப்பற்றி கன்னிகா பொடிவைத்து பேசுகிறாரே என குழப்பம் அடைந்திருக்கின்றனர்.

கன்னிகா பேசிய வார்த்தைகள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்போடு இருந்த இந்த நிகழ்ச்சியை தற்போது 17 ஆவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் பாடலாசிரியர் சினேகன்
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த விளையாட்டை விளையாடி வருகிறார். ஆனால் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லையாம். தற்போது சினேகன் மனைவியான கன்னிகா பேசிய வார்த்தைகள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கண் கலங்கிய சினேகன்
திரைத்துறையின் காதல் தம்பதிகளான கன்னிகா மற்றும் சினேகன் பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிள்ளார் சினேகன். அதுபோல கன்னிகாவும் புது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரிடம் இவருக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் பேசிய வீடியோக்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீடியோவில் தனது மனைவியை பார்த்ததும் சினேகன் கண்கலங்கி அழுதுவிட்டார்.

கன்னிகாவின் கண்டிப்பு
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் கன்னிகா தற்போது பேசிய வார்த்தையை கேட்டதும் அரண்டு போய் இருந்தாலும் அதுவும் சரிதான் என்று கூறிவருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் சினேகன் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கிறார். முதல் சீசனில் இவர் விளையாடிய விதம் பலரையும் கவர்ந்து இருந்தது. அதனால்தான் அவர் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டாவதாக வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மீண்டும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ள சக போட்டியாளர்களிடம் இவர் அன்பு காட்டி வருவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை போல, அதனால்தான் தன்னிடம் பாசத்தை காட்டுவது போல உள்ளே இருப்பவர்கள் யாரிடமும் பாசம் காட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

வெளியே மகிழ்ச்சியான செய்தி
என்னிடம் உங்களுக்கு கிடைக்கும் பாசம் போன்று பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்காது. அதனால் ஏமாற்றம்தான் மிஞ்சும். யாரிடமும் அன்பு அளவுக்கு அதிகமாக காட்ட வேண்டாம். அதை வெளியே வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். உங்களுடைய வேலையில் நீங்கள் கவனமாக இருந்தால் போதும். வெளியே வந்ததும் நீங்கள் சந்தோச படுகிற மாதிரி நான் வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சினேகன் யாரிடம் அதிகமாக பழகுவது பிடிக்கவில்லை என்று கூறுகிறார் என்று ரசிகர்கள் யோசிக்க தொடங்கியிருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications