சினேகனை அதட்டிய கன்னிகா... வெளியே வந்ததும் சந்தோஷமான செய்தி இருக்கு.. ஆனந்த கண்ணீரில் சினேகன்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் சினேகனுக்கு அவருடைய மனைவி அறிவுரை கூறியுள்ளார்.
கன்னிகா கூறிய வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் யாரைப்பற்றி கன்னிகா பொடிவைத்து பேசுகிறாரே என குழப்பம் அடைந்திருக்கின்றனர்.

கன்னிகா பேசிய வார்த்தைகள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்போடு இருந்த இந்த நிகழ்ச்சியை தற்போது 17 ஆவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் பாடலாசிரியர் சினேகன்
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த விளையாட்டை விளையாடி வருகிறார். ஆனால் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லையாம். தற்போது சினேகன் மனைவியான கன்னிகா பேசிய வார்த்தைகள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கண் கலங்கிய சினேகன்
திரைத்துறையின் காதல் தம்பதிகளான கன்னிகா மற்றும் சினேகன் பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிள்ளார் சினேகன். அதுபோல கன்னிகாவும் புது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரிடம் இவருக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் பேசிய வீடியோக்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீடியோவில் தனது மனைவியை பார்த்ததும் சினேகன் கண்கலங்கி அழுதுவிட்டார்.

கன்னிகாவின் கண்டிப்பு
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் கன்னிகா தற்போது பேசிய வார்த்தையை கேட்டதும் அரண்டு போய் இருந்தாலும் அதுவும் சரிதான் என்று கூறிவருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் சினேகன் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கிறார். முதல் சீசனில் இவர் விளையாடிய விதம் பலரையும் கவர்ந்து இருந்தது. அதனால்தான் அவர் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டாவதாக வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மீண்டும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ள சக போட்டியாளர்களிடம் இவர் அன்பு காட்டி வருவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை போல, அதனால்தான் தன்னிடம் பாசத்தை காட்டுவது போல உள்ளே இருப்பவர்கள் யாரிடமும் பாசம் காட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

வெளியே மகிழ்ச்சியான செய்தி
என்னிடம் உங்களுக்கு கிடைக்கும் பாசம் போன்று பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்காது. அதனால் ஏமாற்றம்தான் மிஞ்சும். யாரிடமும் அன்பு அளவுக்கு அதிகமாக காட்ட வேண்டாம். அதை வெளியே வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். உங்களுடைய வேலையில் நீங்கள் கவனமாக இருந்தால் போதும். வெளியே வந்ததும் நீங்கள் சந்தோச படுகிற மாதிரி நான் வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சினேகன் யாரிடம் அதிகமாக பழகுவது பிடிக்கவில்லை என்று கூறுகிறார் என்று ரசிகர்கள் யோசிக்க தொடங்கியிருக்கின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications